நித்யானந்தா என் நிலத்தை ஆட்டையப்போட்டுட்டார்: சேலம் எஸ்.பி.யிடம் விவசாயி புகார்

சேலம் மாவட்டம் சீரகாப்பாடியைச் சேர்ந்தவர் விவசாயி குணசேகரன். அவர் சேலம் மாவட்ட எஸ்.பி. அஸ்வின் கோட்னீசை சந்தித்து நித்யானந்தா மீது நில அபகரிப்பு புகார் மனு ஒன்றை அளி்த்துள்ளார்.
அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது,
கடந்த 2005ம் ஆண்டு சென்னை கிருஷ்ணன், சக்தி, செல்வம் ஆகியோர் மூலம் நித்யானந்தாவிடம் நான் அறிமுகமானேன். அவரது செயலாளர் சதானந்தா உள்ளிட்ட பலர் என்னிடம் சீரகாப்பாடி பகுதியில் நித்யானந்தா ஆசிரமம் அமைக்க விரும்புவதாகவும், கடத்தூர் முக்கோணம் பாளையம் பகுதியில் உள்ள எனது நிலத்தை தானமாக கொடுக்கும்படியும் கேட்டனர். நித்யானந்தாவும் இதுபற்றி என்னிடம் டெலிபோனில் பேசினார்.
எனவே 50 சென்ட் நிலத்தை தானமாக கொடுக்க ஒப்புக் கொண்டேன். கடந்த 2006ம் ஆண்டு பத்திரப்பதிவு அலுவலகத்துக்கு சென்ற என்னிடமும் எனது மனைவி, சகோதரி ஆகியோரிடமும் அவர்கள் ஆங்கிலத்தில் ஏற்கனவே தயார் செய்து வைத்திருந்த பத்திரத்தில் கையெழுத்து வாங்கிக் கொண்டனர். ஆனால் நிலத்துக்கான பணம் குறித்து அவர்கள் பேசவில்லை.
2010ம் அண்டு அக்டோபர் 12ம் தேதி நித்யானந்தாவுக்கு கொடுத்த நிலத்தின் அருகில் இருந்த எனது நிலத்தை விற்க முயன்றபோது நித்யானந்தாவின் ஆதரவாளர்கள் என்னைத் தடுத்து நிலம் முழுவதும் தங்களுடையது எனக் கூறி பத்திரத்தை காட்டினர். அப்போது தான் நான் ஏமாற்றப்பட்டதை அறிந்தேன்.
நித்யானந்தா மற்றும் அவரது ஆதரவாளர்கள் என்னை மிரட்டியதால் போலீசில் புகார் அளிக்கவில்லை. இந்த நிலையில் கடந்த அக்டோபர் 23ம் தேதி என்னை தொடர்பு கொண்ட சிலர் இந்த சம்பவம் தொடர்பாக போலீசில் புகார் அளிக்க வேண்டாம் எனவும், நிலத்தையோ, அதற்கான பணத்தையோ கொடுத்து விடுவதாகவும், இதை நித்யானந்தா சொல்லச் சொன்னதாகவும் கூறினர். ஆனால் அவர்கள் கூறியபடி பணம் தரவில்லை. எனவே எனது நிலத்தை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications