மம்தா ஜீ... டென்சன் ஆகாதீங்க... கொல்கத்தா ஹைகோர்ட்

கடந்த ஆகஸ்டு 14-ந் தேதி மேற்கு வங்க சட்டசபை விழாவில் பங்கேற்று பேசிய மம்தா பானர்ஜி, நீதித்துறை மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தினார். பணத்துக்காக, நீதிபதிகள் தீர்ப்பு அளிப்பதாக மம்தா பானர்ஜி கூறியதற்காக, அவர் மீது தானாக முன்வந்து கோர்ட்டு அவமதிப்பு நடவடிக்கை எடுக்குமாறு மூத்த வக்கீல்கள் விகாஷ் ரஞ்சன் பட்டாச்சார்யா, சுப்ரதா முகர்ஜி ஆகியோர் கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர்.
மம்தாவின் பேச்சு அடங்கிய வீடியோ படத்தையும் தாக்கல் செய்தனர். ஆனால் அந்த வழக்கை விசாரித்த பெஞ்சின் தலைவரான நீதிபதி சென்குப்தா, உத்தரகாண்ட் உயர்நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டார். இதனால், தலைமை நீதிபதி அருண்குமார் மிஸ்ரா, ஜோய்மல்யா பக்சி ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச், இவ்வழக்கை புதிதாக விசாரித்தது. அப்போது வாதாடிய வழக்கறிஞர் விகாஷ் ரஞ்சன் பட்டாச்சார்யா, விமர்சனத்துக்கான ‘லட்சுமணரேகையை' மம்தா தாண்டிவிட்டார் என்று குற்றம் சாட்டினார்.
நீதிமன்றத்தை விமர்சித்த அமைச்சர் பேகாரம் மன்னா மீது நடவடிக்கை எடுத்தது போல மம்தா மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வற்புறுத்தினார். அதைத் தொடர்ந்து மனு மீதான தீர்ப்பை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
இந்நிலையில், செவ்வாய்கிழமையன்று இவ்வழக்கில் நீதிபதிகள் தீர்ப்பு அளித்தனர். அமைச்சர் பேகாரம் மன்னா, ஒரு குறிப்பிட்ட உத்தரவு பற்றி விமர்சித்தார். அதனால் அவர் மீது அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால், மம்தா பானர்ஜி எந்த குறிப்பிட்ட உத்தரவு பற்றியோ, நீதிமன்றம் பற்றியோ விமர்சிக்கவில்லை. ஆகவே, அவர் மீது நடவடிக்கை எடுக்க விரும்பவில்லை என்று கூறிய நீதிபதிகள், அம்மனுவை தள்ளுபடி செய்தனர்.
நீதிமன்றம் அவமதிப்பு நடவடிக்கை எடுக்காததால், மம்தாவின் செயலை நாங்கள் அங்கீகரித்ததாக கருதக்கூடாது. பேசியவர், இந்த மாநிலத்தின் முதல்வர், அவரது பேச்சில் சாந்தம் கலந்திருக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
-
வந்தே மாதரம் பாடல் விவகாரம்.. மத்திய அரசின் உத்தரவுக்கு எதிராக வழக்கு தொடர ஐகோர்ட் அனுமதி! -
திமுக போல தோற்காம இருக்கனும்னா திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற விஜய் அரசு ஓகே சொல்லனும்- நயினார் -
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ் -
மம்தாவுக்கு புது பிரச்சனை.. இரண்டாக உடையும் திரிணாமுல் காங்கிரஸ்! யார் அந்த கருப்பு ஆடு? -
விஜய் அரசுக்கு அக்னி பரீட்சை.. திருப்பரங்குன்றம் தீபம் வழக்கில் நிலைப்பாடு என்ன? ஐகோர்ட் கேள்வி! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது












Click it and Unblock the Notifications