42 பேரால் 40 நாட்கள் சீரழிக்கப்பட்ட பெண்... 16 வருடமாக நீதிக்காக போராடுகிறார்!
திருவனந்தபுரம்: 16 வயதாக இருந்தபோது 42 பேரால், 40 நாட்களுக்கு சீரழிக்கப்பட்ட ஒரு பெண் தற்போது 16 ஆண்டுகளுக்குப் பின்னரும் நீதி கிடைக்காமல் தொடர்ந்து மன வேதனையில் உழன்று கொண்டுள்ளார்.
கேரளாவையே பெரும் பரபரப்பில் ஆழ்த்திய சூர்யநெல்லி பலாத்கார வழக்குதான் இது. இடுக்கி மாவட்டம் சூர்யநெல்லி கிராமத்தில் நடந்த கொடூரமான பலாத்கார கொடுமை இது.
1996ம் ஆண்டு ஜனவரி 16ம் தேதி, அப்போது 16 வயதாக இருந்த அப்பெண்ணை கடத்தினார் ஒரு பஸ் கண்டக்டர். முதலில் அவர் பலாத்காரம் செய்தார். அதன் பின்னர் அடுத்த 40 நாட்களுக்கு அப்பெண்ணை 42 பேர் கொடூரமாக பலாத்காரம் செய்தனர். ஒவ்வொரு ஊராக அப்பெண்ணைக் கொண்டு சென்று கொடுமைப்படுத்தி, சித்திரவதை செய்து, அடித்து உதைத்து பலாத்காரம் செய்தனர்.
இந்தக் கொடும் செயலால் பெரும உடல் பாதிப்புக்குள்ளானார் அப்பெண். கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது இந்த வழக்கு. பெரிய அளவில் போராட்டங்கள் வெடித்தன. ஆனால் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டவர்களில் பலரும் அரசியல் ரீதியாக செல்வாக்கு படைத்தவர்கள் என்பதால் அரசு அமைதி காத்தது. ஆனால் பெருகி வந்த மக்கள் எதிர்ப்பு மற்றும் போராட்டங்கள் காரணமாக 1999ம் ஆண்டு தனி நீதிமன்றம் அமைக்கப்பட்டது. இதுதான் பாலியல் பலாத்கார வழக்குக்காக கேரளாவில் நியமிக்கப்பட்ட முதல் தனி கோர்ட் ஆகும்.
இந்த வழக்கில் 35 பேரை கீழ்க் கோர்ட் குற்றவாளி என்று அறிவித்தது. ஆனால் கேரள உயர்நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை ரத்து செய்து ஒருவரை மட்டுமே குற்றவாளி என தீர்ப்பளித்தது. உயர்நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து அப்பெண்ணின் குடும்பமும், அரசும், உச்சநீதிமன்றத்தில் 2005ம் ஆண்டு அப்பீல் செய்தனர். அதில் இதுவரை விசாரணை தொடங்கவே இல்லை.
பலாத்காரக் கொடுமைக்குள்ளான பெண் இன்று வரை நியாயம் கிடைக்காமல் தவித்து வருகிறார். மேலும் அவரது குடும்பத்தையும் மக்கள் ஒதுக்கி வைத்து வருகிறார்கள். இதுகுறித்து அப்பெண்ணின் தந்தை கூறுகையில், யாரும் எங்களை சேர்த்துக் கொள்வதில்லை. எங்களைத் தவிர்க்கப் பார்க்கிறார்கள். யாரும் எஙகளுடன் பேசுவதில்லை. இந்த நிலை காரணமாக நாங்கள் வெளியில் போவதே இல்லை என்று கூறுகிறார்.
பலாத்காரக் கொடுமைக்குள்ளான பெண்ணுக்கு அரசு பியூன் வேலை போட்டுக் கொடுத்தது. ஆனால் கடந்த பிப்ரவரி மாதம் திருட்டுப் பட்டம் கட்டி அவரை சஸ்பெண்ட் செய்து விட்டனராம்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications