சட்டசபை தேர்தல்: திரிபுராவில் பிப். 14; மேகாலயா,நாகலாந்தில் பிப். 23-ல் வாக்குப் பதிவு
டெல்லி: வடகிழக்கு மாநிலங்களான திரிபுரா, நாகாலாந்து, மேகாலயா மாநில சட்டசபைகளுக்கான தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது.
திரிபுரா, நாகாலாந்து, மேகாலயா ஆகிய மாநிலங்களில் மார்ச் மாதத்துடன் சட்டசபைகளின் பதவிக் காலம் முடிவடைகிறது. இதனால் இம்மாநிலங்களில் தேர்தல் நடத்தப்படுகிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பே மூன்று மாநிலங்களிலும் தேர்தல் களைகட்டி விட்டது. 3 மாநிலங்களிலும் 60 சட்டசபை தொகுதிகள் உள்ளன. பெரும்பாலான கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்தில் இறக்கிவிட்டிருக்கின்றனர்.
இந்நிலையில் டெல்லியில் இன்று தலைமைத் தேர்தல் ஆணையாளர் தேர்தல் தேதியை அறிவித்தார். திரிபுரா மாநிலத்தில் பிப்ரவரி 14-ந் தேதி வாக்குப் பதிவு நடைபெறும். மேகாலயா, நாகாலாந்தில் பிப்ரவரி 23-ந் தேதி வாக்குப் பதிவு நடைபெறும். மூன்று மாநிலங்களின் வாக்குகளும் பிப்ரவரி 28-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டதால் இன்று முதல் அம்மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வருகின்றன.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications