சிறுமியிடம் சில்மிஷம்: காவல் நிலையத்தில் ஓடி விளையாடிய முதியவர்
திருச்செந்தூர்: கமுதியில் இருந்து திருச்செந்தூருக்கு பாதயாத்திரை வந்தபோது வழிதவறி சுற்றித் திரிந்தவர் சிறுமியிடம் சில்மிஷம் செய்த போது சிக்கினார். காவல் நிலையத்தில் அவரிடம் விசாரணை நடத்தியபோது ஓடிப் பிடித்து விளையாடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்செந்தூர் அருகே வீரபாண்டியன்பட்டணம் கடற்கரையில் கடந்த 10 நாட்களுக்கு முன் சுமார் 50 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் அங்கு விளையாடிக் கொண்டிருந்த 7 வயது சிறுமியை கையைப் பிடித்து இழுத்து சில்மிஷத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து சிறுமியின் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் மர்ம ஆசாமியை பிடித்து திருச்செந்தூர் போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் அந்த நபர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என தெரிய வந்ததால் அவர் விடுவிக்கப்பட்டார்.
இந்நிலையில் நேற்று மீண்டும் அதே நபர் வீரபாண்டியன்பட்டணம் குடியிருப்பு பகுதியில் சுற்றித் திரிந்தார். இதனால் அந்த நபர் குழந்தையை கடத்தும் கும்பலை சேர்ந்தவராக இருக்கலாம் என பெற்றோர் பீதியடைந்தனர். இதையடுத்து அப்பகுதி ஆட்டோ டிரைவர்கள் மற்றும் பொதுமக்கள் மர்ம ஆசாமியை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் வாய் பேச முடியாதவர் போன்று சைகையால் பேசினார். பின்னர் பொதுமக்கள் தர்ம அடி கொடுத்ததைத் தொடர்ந்து தான் கமுதியைச் சேர்ந்தவர் என்றும் அங்கிருந்து திருச்செந்தூர் கோயிலுக்கு வந்தபோது உடன் வந்தவர்கள் தன்னை இங்கேயே விட்டு சென்றதாகவும் தெரிவித்தார். இதையடுத்து அவர் மீண்டும் திருச்செந்தூர் போலீசில் ஒப்படைக்கப்பட்டார்.
காவல் நிலையத்திலும் அவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் போல ஓடிப் பிடித்து விளையாடுவது, குடி தண்ணீர் பைப்பை திறந்து விடுவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு போலீசாருக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தினார். இதையடுத்து கமுதியில் உள்ள அவரது உறவினர்களை போலீசார் தொடர்பு கொண்டு விசாரித்தனர். இதில் அவர் திருச்செந்தூருக்கு வந்தபோது பாதயாத்திரையில் காணாமல் போனது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவரை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications