நாடாளுமன்றத் தேர்தலில் யாருடனும் கூட்டணி இல்லை... விஜயகாந்த்: மறுபடியும் முதல்ல இருந்தா?!
தஞ்சாவூர்: நாடாளுமன்றத் தேர்தலில் யாருடனும் கூட்டணி வைக்கப் போவதில்லை, தேமுதிக தனித்தே தேர்தலை எதிர்கொள்ளும் என்று அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
தஞ்சாவூரில் நேற்று பொங்கல் பண்டிகை பொருட்கள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்ற விஜயகாந்த் தஞ்சையில் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் குடும்பத்திற்கு தலா 25 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கினார். பின்னர் பொங்கல் பொருட்களை வழங்கி அவர் பேசியதாவது:
தடை இல்லா மின்சாரம் வழங்குவேன் என உறுதியளித்த ஜெயலலிதா தற்போது மத்திய அரசின் மீது பழிபோடுவதை ஏற்க முடியாது என்று விஜயகாந்த் கூறினார்.
சம்பா சாகுபடிக்கு தண்ணீர் இல்லாமல் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டபோது செயல்படாமல் இருந்த அரசு இப்போது அமைச்சர்களை அனுப்பி ஆய்வு நடத்துகிறது என்றார். இது மக்களை முழுவதும் ஏமாற்றும் முயற்சி என்றும் விமர்சித்தார்.
இதனைத் தொடர்ந்து பேசிய விஜயகாந்த், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் யாருடனும் கூட்டணி வைக்கப் போவதில்லை என்று திட்டவட்டமாக அறிவித்தார்.
இதேபோல் நாடாளுமன்றத் தேர்தலில் தனித்து போட்டியிடப் போவதாக முன்னதாக அதிமுக அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மறுபடியும் முதல்ல இருந்தா?!












Click it and Unblock the Notifications