கோவையில் முதல் மனைவிக்கு தெரியாமல் 2 பெண்களை மணந்த ஏட்டைய்யா சஸ்பெண்ட்
கோவை: கோவையில் முதல் மனைவிக்கு தெரியாமல் 2 பெண்களை திருமணம் செய்த ஏட்டு சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
கோவை செல்வபுரம் காவல் நிலையத்தில் ஏட்டாக இருப்பவர் செந்தில் குமார்(45). கடந்த 2009ம் ஆண்டு ஜூன் மாதம் 29ம் தேதி அவருக்கும், கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்த முருகவள்ளிக்கும் திருமணம் நடந்தது. அதன் பிறகு அதே ஆண்டு போத்தனூரைச் சேர்ந்த லாலு என்ற பெண்ணை மணந்தார் செந்தில் குமார். 2 பெண்களை மணந்தது போதாது என்று கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 28ம் தேதி கோவை டாடாபாத்தைச் சேர்ந்த பத்மினி என்பவரையும் மணந்தார்.
ஒருத்தரை மணந்தது இன்னொருத்தருக்கு தெரியாதவாறு பார்த்துக் கொண்டார். இந்நிலையில் அவர் 3 முறை திருமணம் செய்தது முதல் மனைவியான முருகவள்ளிக்கு தெரிய வந்தது. இதையடுத்து அவர், முதல் மனைவி உயிருடன் இருக்கும்போதே அவருக்கு தெரியாமல் வேறு 2 பெண்களை திருமணம் செய்த செந்தில் குமார் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவை விசாரித்த நீதிபதி செந்தில் குமார் மீது நடவடிக்கை எடுக்குமாறு கோவை மாநகர கமிஷனர் விஸ்வநாதனுக்கு உத்தரவிட்டார். அவர் இந்த விவகாரம் குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு செல்வபுரம் போலீசாருக்கு உத்தரவிட்டார். போலீசார் அளித்த அறிக்கையின் அடிப்படையில் செந்தில் குமாரை சஸ்பெண்ட் செய்து கமிஷனர் உத்தரவிட்டார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications