கர்நாடகா: எதியூரப்பா எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்து தப்ப முயலும் பாஜக அரசு!

கர்நாடகா மாநில ஆளும் பாஜகவுக்கு அவ்வப்போது கொத்து கொத்தாக எம்.எல்.ஏக்கள் அதிருப்தி தெரிவித்து ராஜினாமா செய்வது வழக்கம். அதனால் அரசு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய சூழல் ஏற்படும். அப்படி ஒரு நெருக்கடியான நிலைமை ஏற்படும் போது பதிலடியாக அதிருப்தி "எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம்" செய்து ஒட்டுமொத்த கணக்கில் இருந்து கழித்துவிட்டு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுவிடுவர்.
கடந்த 2010-ம் ஆண்டு எதியூரப்பாவுக்கு எதிராக இப்படித்தான் 11 பாஜக எம்.எல்.ஏக்களும் 5 சுயேட்சை எம்.எல்.ஏக்களும் போர்க்கொடி தூக்கி ராஜினாமா செய்தனர். இதற்காக மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் குமாரசாமி வரிந்து கட்டிக் கொண்டு அப்போது வேலை செய்து பார்த்தார். ஆனால் அப்போதைய முதல்வர் எதியூரப்பா தமது பதவியைக் காப்பாற்ற சபாநாயகர் போபையா உதவியுடன் 16 எம்.எல்.ஏக்களையும் தகுதி நீக்கமே செய்துவிட்டு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி வெற்றியும் பெற்றுவிட்டார்.
காலம் சுழன்று விசித்திர கோலத்தில் நிற்கிறது. தற்போது முதல்வராக உள்ள ஜெகதீஷ் ஷெட்டருக்கு எதிராக எதியூரப்பாவின் ஆதரவாளர்கள் 13 பேர் நாளை ராஜினாமா கடிதத்தை சபாநாயகரிடம் கொடுக்க இருக்கின்றனர். இவர்கள் அனைவரும் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆளுநர் பரத்வாஜிடம் ராஜினாமா கடிதத்தைக் கொடுத்தனர். சபாநாயகர் தற்போது நாடு திரும்பியுள்ள நிலையில் நாளை அவர்களிடம் ராஜினாமா கடிதம் கொடுக்க இருக்கின்றனர்.
ஆனால் இப்போது ஜெகதீஷ் ஷெட்டரோ தமது ஆதரவு எம்.எல்.ஏக்கள் மூலமாக ராஜினாமா செய்யக் கூடிய 12 அல்லது 13 எம்.எல்.ஏக்களையுமே தகுதி நீக்கம் செய்துவிடவேண்டும் என்று கோரிக்கை விடுத்திருக்கின்றனர். அன்று எதியூரப்பாவுக்காக எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்த அதே சபாநாயகர் போபையாதான் இன்று எதியூரப்பாவின் ஆதரவாளர்களையும் தகுதி நீக்கம் செய்வாரா என்பது தெரியவில்லை.
ஆட்சியைத் தக்க 'எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம்' என்ற ஆயுதத்தை பயன்படுத்துவது கர்நாடகா அரசியலில் வாடிக்கையாகிப் போய்விட்டது!
-
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்!











Click it and Unblock the Notifications