ராஜிவ் கொலை வழக்கில் விசாரணை முழுமையாக முடியலையே..:ரகோத்தமன் அதிரடி!

அப்சல் குருவைத் தூக்கிலிட்ட நிலையில் ராஜிவ் மற்றும் பியாந்த்சிங் கொலையாளிகள் இன்னமும் தூக்கிலிடப்படவில்லையே என்று ஒருதரப்பில் கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஊடகங்கள் பலவும் பல கோணங்களில் செய்திகளை வெளியிட்டு வருகின்றன.
ராஜிவ் கொலையாளிகள் விவகாரமும் அப்சல் குரு விவகாரமும் எப்படி வேறுபட்டது என்று டெக்கான் கிரானிக்கல் பத்திரிகையில் மூத்த பத்திரிகையாளர் பகவான்சிங் ஒரு கட்டுரையை எழுதியிருக்கிறார். அந்தக் கட்டுரையில், ராஜிவ் காந்தி கொலையாளிகளை தூக்கிலிட்டால் காங்கிரஸ் கட்சிக்கும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் 2014-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் கடுமையான பாதிப்பு ஏற்படும் என்றும் சுட்டிக்காட்டியிருக்கிறார்.
மேலும் இந்த வழக்கிக் கருணை மனு நிராகரிக்கப்பட்டது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது என்றும் தெரிவித்திருக்கிறார்.
ஆனால் இந்தக் கட்டுரைக்காக பேட்டியளித்திருக்கும் ராஜிவ் கொலை வழக்கு விசாரணை அதிகாரி ரகோத்தமனோ வழக்கு விசாரணையே இன்னமும் முழுமை அடையவில்லை என்று கூறியுள்ளார்.
ராஜிவ் கொலையாளிகளான தணு மற்றும் சிவராசனுக்கும் காங்கிரஸ் மூத்த தலைவர் மரகதம் சந்திரசேகர் குடும்பத்தினருக்குமான தொடர்பு என்ன? 1991-ம் ஆண்டு மே 21-ந் தேதி ஸ்ரீபெரும்புதூரில் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தை திமுக தலைவர் கருணாநிதி திடீரென ரத்து செய்தது ஏன்? என்பது போன்ற கேள்விகளுக்கு மரகதம் சந்திரசேகர் மற்றும் கருணாநிதியிடம் விசாரணையே நடத்தப்படவில்லை. ஒரு வழக்கில் அத்தனை அம்சங்களுமே விசாரிக்கப்பட வேண்டும். ஆனால் ராஜிவ் கொலை வழக்கில் அப்படி நடக்கவில்லையே என்று குமுறியிருக்கிறார்.
இதேபோல் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சந்திராசாமி, சுப்பிரமணியசுவாமி ஆகியோரை விசாரிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் திருச்சி வேலுச்சாமி நீண்டகாலமாக வலியுறுத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது.
-
விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம் -
ஜான் ஆரோக்கியசாமி போட்ட மெகா ஸ்கெட்ச்.. மிரண்டு போன பாஜக மேலிடம்.. B டீம் முத்திரையை உடைப்பாரா விஜய் -
திரிஷா சர்ச்சை அடங்குவதற்குள் மீண்டும் பரபரப்பு… காதல், கள்ளக்காதல் பற்றி பார்த்திபன் ஓபனாக பேச்சு -
அதிமுக எம்பியாக இருந்தபோதே கனிமொழி அக்கா எனக்கு பயிற்சி கொடுத்தார்.. ஓ.பி. ரவீந்திரநாத் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை பழிதீர்த்த கர்மா.. முத்துவால் ஏற்பட்ட குழப்பம்.. சந்தோஷத்தில் ரோகிணி -
மீண்டும் தள்ளிப்போகும் தேர்தல் தேதி அறிவிப்பு.. பின்னணியில் 3 காரணங்கள்.. தமிழகம் உள்பட 5 மாநில வாக்குப்பதிவு எப்போது? -
தவெகவில் பணக்கஷ்டம்.. ரூ.5 கோடி செலவு செய்ய வேட்பாளர்கள் இல்லை.. கூட்டணி செல்வது தான் சரி.. விஜய்க்கு அழுத்தம் -
Rasi Palan: கடகம், சிம்மம், கன்னிக்கு மார்ச் மாதத்தில் அடிக்குமா ஜாக்பாட்.. முழு பலன்கள் விவரம் -
அதில் இருந்தது கோழி கால் இல்லை.. சொமாட்டோ பிரியாணி பார்சலில் இருந்தது? அலற விட்ட 28 நிமிட வீடியோ -
சிங்காநல்லூர் வாய்ப்பில்லை.. பல்லடம் தொகுதியில் அண்ணாமலையை நிற்க சொல்லுங்க.. மறுக்கும் அதிமுக! -
Rasi Palan: துலாம், விருச்சிகம், தனுசு ராசிக்கான மார்ச் மாத பலன்.. முழு விவரம் இதோ -
வேளச்சேரி- பரங்கிமலை ரயில்.. மிகப்பெரிய சம்பவத்தை 'சைலண்ட்' ஆக செய்த மத்திய அரசு.. பின்னணி












Click it and Unblock the Notifications