ராஜிவ் கொலை வழக்கில் விசாரணை முழுமையாக முடியலையே..:ரகோத்தமன் அதிரடி!

அப்சல் குருவைத் தூக்கிலிட்ட நிலையில் ராஜிவ் மற்றும் பியாந்த்சிங் கொலையாளிகள் இன்னமும் தூக்கிலிடப்படவில்லையே என்று ஒருதரப்பில் கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஊடகங்கள் பலவும் பல கோணங்களில் செய்திகளை வெளியிட்டு வருகின்றன.
ராஜிவ் கொலையாளிகள் விவகாரமும் அப்சல் குரு விவகாரமும் எப்படி வேறுபட்டது என்று டெக்கான் கிரானிக்கல் பத்திரிகையில் மூத்த பத்திரிகையாளர் பகவான்சிங் ஒரு கட்டுரையை எழுதியிருக்கிறார். அந்தக் கட்டுரையில், ராஜிவ் காந்தி கொலையாளிகளை தூக்கிலிட்டால் காங்கிரஸ் கட்சிக்கும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் 2014-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் கடுமையான பாதிப்பு ஏற்படும் என்றும் சுட்டிக்காட்டியிருக்கிறார்.
மேலும் இந்த வழக்கிக் கருணை மனு நிராகரிக்கப்பட்டது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது என்றும் தெரிவித்திருக்கிறார்.
ஆனால் இந்தக் கட்டுரைக்காக பேட்டியளித்திருக்கும் ராஜிவ் கொலை வழக்கு விசாரணை அதிகாரி ரகோத்தமனோ வழக்கு விசாரணையே இன்னமும் முழுமை அடையவில்லை என்று கூறியுள்ளார்.
ராஜிவ் கொலையாளிகளான தணு மற்றும் சிவராசனுக்கும் காங்கிரஸ் மூத்த தலைவர் மரகதம் சந்திரசேகர் குடும்பத்தினருக்குமான தொடர்பு என்ன? 1991-ம் ஆண்டு மே 21-ந் தேதி ஸ்ரீபெரும்புதூரில் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தை திமுக தலைவர் கருணாநிதி திடீரென ரத்து செய்தது ஏன்? என்பது போன்ற கேள்விகளுக்கு மரகதம் சந்திரசேகர் மற்றும் கருணாநிதியிடம் விசாரணையே நடத்தப்படவில்லை. ஒரு வழக்கில் அத்தனை அம்சங்களுமே விசாரிக்கப்பட வேண்டும். ஆனால் ராஜிவ் கொலை வழக்கில் அப்படி நடக்கவில்லையே என்று குமுறியிருக்கிறார்.
இதேபோல் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சந்திராசாமி, சுப்பிரமணியசுவாமி ஆகியோரை விசாரிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் திருச்சி வேலுச்சாமி நீண்டகாலமாக வலியுறுத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications