இங்கிலாந்தில் 182 வாட்டி அபேஸ் பண்ண பலே திருடிக்கு 2 ஆண்டு சிறை

இங்கிலாந்தில் உள்ள நியூ காஸில் கிரவுன் நீதிமன்றம் சன்டர்லேண்டைச் சேர்ந்த 32 வயதாகும் கிளெய்ர் மெக்கார்வா என்ற திருட்டுப் பெண்ணுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. இதையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
கிளெய்ர் சாதாரண பெண் அல்ல இதுவரை 182 முறை திருடி சிக்கியுள்ளார். அவருக்கு திருந்த பல முறை வாய்ப்பு அளித்தும் அவர் அதை பயன்படுத்திக்கொள்ளவில்லை. சிறையில் இருந்து விடுதலையான இரண்டாவது வாரத்தில் அவர் ஒரு கம்ப்யூட்டரை திருடியதுடன் ஒரு கடையில் இருந்து ரூ. 33,831 மதிப்புள்ள பொருட்களை திருடினார்.
இதையடுத்து போலீசில் சிக்கிய அவர் நியூ காஸில் கிரவுன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி ஜேம்ஸ் காஸ் கிளெய்ரைப் பார்த்து, உங்களை குற்றச் செயல் செய்வதில் இருந்து தடுக்க போலீசார், புரபேஷன் ஆபீசர் மற்றும் நான் முயற்சி செய்து தோல்வி அடைந்துவிட்டோம். உங்களுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படுகிறது என்றார்.
போதைப் பழக்கம் உள்ள கிளெய்ர் கடந்த செப்டம்பர் மாதம் சிறை தண்டனையை முடித்து வெளியேறிய பின்னர் சன்டர்லேண்ட் மியூசியத்தில் இருந்து ஒரு லேப்டாப்பை திருடியுள்ளார். இந்த சம்பவம் நடந்து 4 நாட்கள் கழித்து ரூ.1,014 மதிப்புள்ள டியோடரன்ட் மற்றும் ரூ.4,500 மதிப்புள்ள சத்துணவு பொருட்கள் ஆகியவற்றை திருடியுள்ளார்.
கடந்த நவம்பர் மாதம் 29ம் தேதி ரூ. 26,278 மதிப்புள்ள டிவிடிக்கள், வாட்ச்சுகளை திருடினார். ஜனவரி 4ம் தேதி ரூ.2,956 மதிப்புள்ள பலசரக்கு பொருட்களை திருடினார். இது தவிர ஒரு கடையில் இருந்து ரூ. 25,319 மதிப்புள்ள உணவுப் பொருட்கள், ஐஸ்லாந்தில் இருந்து ரூ. 2,194 மதிப்புள்ள உணவுப் பொருட்கள் மற்றும் அஸ்டாவில் இருந்து ரூ. 33,422 மதிப்புள்ள டிவியை திருடியுள்ளார். இத்தனை பொருட்களையும் திருடியதாக அவர் நீதிமன்றத்தில் ஒப்புக் கொண்டார்.
அவரை திருந்துமாறு கூறி கூறி அலுத்துப் போன நீதிபதி இறுதியில் 2 ஆண்டு சிறை தண்டனை விதித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை












Click it and Unblock the Notifications