இங்கிலாந்தில் 182 வாட்டி அபேஸ் பண்ண பலே திருடிக்கு 2 ஆண்டு சிறை

இங்கிலாந்தில் உள்ள நியூ காஸில் கிரவுன் நீதிமன்றம் சன்டர்லேண்டைச் சேர்ந்த 32 வயதாகும் கிளெய்ர் மெக்கார்வா என்ற திருட்டுப் பெண்ணுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. இதையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
கிளெய்ர் சாதாரண பெண் அல்ல இதுவரை 182 முறை திருடி சிக்கியுள்ளார். அவருக்கு திருந்த பல முறை வாய்ப்பு அளித்தும் அவர் அதை பயன்படுத்திக்கொள்ளவில்லை. சிறையில் இருந்து விடுதலையான இரண்டாவது வாரத்தில் அவர் ஒரு கம்ப்யூட்டரை திருடியதுடன் ஒரு கடையில் இருந்து ரூ. 33,831 மதிப்புள்ள பொருட்களை திருடினார்.
இதையடுத்து போலீசில் சிக்கிய அவர் நியூ காஸில் கிரவுன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி ஜேம்ஸ் காஸ் கிளெய்ரைப் பார்த்து, உங்களை குற்றச் செயல் செய்வதில் இருந்து தடுக்க போலீசார், புரபேஷன் ஆபீசர் மற்றும் நான் முயற்சி செய்து தோல்வி அடைந்துவிட்டோம். உங்களுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படுகிறது என்றார்.
போதைப் பழக்கம் உள்ள கிளெய்ர் கடந்த செப்டம்பர் மாதம் சிறை தண்டனையை முடித்து வெளியேறிய பின்னர் சன்டர்லேண்ட் மியூசியத்தில் இருந்து ஒரு லேப்டாப்பை திருடியுள்ளார். இந்த சம்பவம் நடந்து 4 நாட்கள் கழித்து ரூ.1,014 மதிப்புள்ள டியோடரன்ட் மற்றும் ரூ.4,500 மதிப்புள்ள சத்துணவு பொருட்கள் ஆகியவற்றை திருடியுள்ளார்.
கடந்த நவம்பர் மாதம் 29ம் தேதி ரூ. 26,278 மதிப்புள்ள டிவிடிக்கள், வாட்ச்சுகளை திருடினார். ஜனவரி 4ம் தேதி ரூ.2,956 மதிப்புள்ள பலசரக்கு பொருட்களை திருடினார். இது தவிர ஒரு கடையில் இருந்து ரூ. 25,319 மதிப்புள்ள உணவுப் பொருட்கள், ஐஸ்லாந்தில் இருந்து ரூ. 2,194 மதிப்புள்ள உணவுப் பொருட்கள் மற்றும் அஸ்டாவில் இருந்து ரூ. 33,422 மதிப்புள்ள டிவியை திருடியுள்ளார். இத்தனை பொருட்களையும் திருடியதாக அவர் நீதிமன்றத்தில் ஒப்புக் கொண்டார்.
அவரை திருந்துமாறு கூறி கூறி அலுத்துப் போன நீதிபதி இறுதியில் 2 ஆண்டு சிறை தண்டனை விதித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications