ஜாலியன்வாலா பாக் படுகொலை அவமானகரமானது - இங்கிலாந்து பிரதமர் கேமரூன்

Subscribe to Oneindia Tamil

David Cameron
டெல்லி: வெள்ளையர் ராணுவம், பஞ்சாபின் ஜாலியன்வாலாபாக்கில் நடத்திய கொடூரக்கொலைகள் மிகவும் அவமானகரமானது என்று இந்தியா வந்துள்ள இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் தெரிவித்துள்ளார்.

ஜாலியன்வாலா பாக்குக்கு இன்று சென்றார் கேமரூன். அங்குள்ள நினைவிடத்தில் அவர் அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் அங்கு வைக்கப்பட்டிருந்த பார்வையாளர் புத்தகத்தில் அவர் எழுதுகையில், இங்கிலாந்து வரலாற்றில் இது மிகவும் அவமானகரமானதாகும். அந்த சமயத்தில் இதுகுறித்து வின்ஸ்டன் சர்ச்சிலும் சரியான முறையில் கருத்து தெரிவித்திருந்தார். இதுபோன்ற சம்பவங்களை நம்மால் மறக்க முடியாது. அமைதி வழியில் போராடுவோருக்கு இங்கிலாந்து முழு ஆதரவு தரும் என்பதை இந்த நேரத்தில் சொல்லிக் கொள்கிறேன் என்றார் அவர்.

ஜாலியன்வாலாபாக் படுகொலை நடந்த இடத்திற்கு இதுவரை எந்த இங்கிலாந்து பிரதமரும் வந்ததில்லை. கேமரூன்தான் முதல் இங்கிலாந்துப் பிரதமர் ஆவார். இன்றைய வருகையின்போது வருத்தம் தெரிவித்தாரே தவிர மன்னிப்பு எதையும் அவர் கேட்கவில்லை.

1919ம் ஆண்டு ஏப்ரல் 13ம் தேதி வெள்ளைக்காரப் படையினர் ஜெனரல் ரெஜினால்ட் டயர் தலைமையில் இங்கு நடத்திய வெறித்தனமான துப்பாக்கிச் சூட்டுக்கு பல ஆயிரம் பேர் பலியானார்கள் என்பது நினைவிருக்கலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+