நாராயணசாமி ஆபீஸ் மீது சரமாரி கல்வீச்சு.. பிரதமர், சோனியா கொடும்பாவிகள் எரிப்பு

புதுவை: தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் 2 லட்சம் தமிழர்களை கொன்ற இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு துணை நிற்கும் பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவி சோனியாகாந்தி ஆகியோரின் உருவபொம்மையை எரிக்கும் போராட்டம் அண்ணாசிலை அருகே நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இதற்காக நகரமெங்கும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு இருந்தது.
அதன்படி இன்று காலை 10 மணியளவில் அண்ணா சிலை அருகே தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் திரண்டு வந்தனர். போராட்டத்தில் 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
அப்போது அண்ணாசிலை அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அவர்கள் திடீரென மறைத்து வைத்திருந்த பிரதமர் மன்மோகன்சிங், சோனியாகாந்தி உருவபொம்மைகளையும், சோனியாகாந்தியை பேய் போல் சித்தரித்து வைத்திருந்த உருவ படத்தையும் எரித்தனர். மேலும் உருவபடங்களை அண்ணா சிலையை சுற்றி சுற்றி வந்து தீ வைத்தனர். இதனை போலீசார் சுற்றி சுற்றி வந்து தீயை அணைக்க முயன்றனர்.
மறுபக்கம் இன்னொரு பிரிவினர் கம்பன் கலை அரங்கில் உள்ள மத்திய அமைச்சர் நாராயணசாமியின் அலுவலகத்தை நோக்கி ஓடினார்கள். அங்கு அவர்கள் அலுவலகத்தை கல்வீசி தாக்கினார்கள். இந்த கல்வீச்சால் அலுவலகத்தில் அமைக்கப்பட்டிருந்த அலங்கார கண்ணாடிகள் உடைந்து போனது. மேலும் அலுவலக நுழைவு வாயிலில் நுழைந்து அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களை கீழே தள்ளி விட்டனர். இதனால் போராட்டகாரர்களை கட்டுப்படுத்த போலீசார் திணறினார்கள். எனினும் ஒரு வழியாக போராட்டக்காரர்களை சுற்றி வளைத்து கைது செய்தனர். 100-க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.
மயிலாடுதுறையில்ராஜபக்சே கொடும்பாவிஎரிப்பு
அதேபோல ஈழ விடுதலைக்கான மாணவர் போராட்டத்திற்கு ஆதரவாக மயிலாடுதுறை தபால்நிலையத்தை பூட்டிப் போட்டு, ராஜபக்சே கொடும்பாவியை எரித்த எஸ்.டி.பி.ஐ அமைப்பினர் நூற்றுக்கணக்கானோர் கைதுசெய்யப்பட்டனர்..
-
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு!












Click it and Unblock the Notifications