சிங்கள தொழில் அதிபரை தூத்துக்குடியில் இருந்து திருப்பி அனுப்பிய போலீசார்
தூத்துக்குடி: இலங்கையில் இருந்து தமிழகம் வந்த புத்த பிச்சுகள் தாக்கப்பட்ட சம்பவத்தையடுத்து தூத்துக்குடியில் தங்கியிருந்த சிங்கள தொழில் அதிபரை போலீசார் பாதுகாப்பாக திருப்பி அனுப்பினர்.
இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு வரும் சிங்களர்கள் தாக்கப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதனால் தமிழகம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். அண்மையில் இலங்கையில் இருந்து தமிழகம் வந்த புத்த பிச்சுகள் தாக்கப்பட்டனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த 5 சிங்கள மீனவர்களை போலீசார் பலத்த பாதுகாப்புடன் தூத்துக்குடியில் இருந்து ராமநாதபுரம் கொண்டு சென்றனர். அங்குள்ள நீதிமன்றத்தில் அவர்கள் ஆஜர்படுத்தப்பட்டு ஸ்ரீவைகுண்டம் கிளை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே தூத்துக்குடி கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள ஒரு ஹோட்டலில் சிங்கள தொழில் அதிபரான லாலாசி நானாதி ரனதுங்கே என்பவர் தங்கியிருந்தார். மாலத்தீவு மற்றும் இலங்கையில் 1கே20 என்ற பெயரில் உப்பு மார்க்கெட்டிங் கம்பெனி வைத்துள்ள அவர் கடந்த 18ம் தேதி தூத்துக்குடி வந்துள்ளார். அங்கு தொழில் நிமித்தமாக லோகேஷ் என்பவரை சந்தித்து விட்டு நாளை இலங்கை திரும்ப இருந்தார்.
இந்நிலையில் போலீசார் அவர் தங்கியிருந்த ஹோட்டலுக்கு சென்று அவரிடம் நிலைமையை எடுத்துக் கூறி முன்னெச்சரிக்கையாக அவரை மதுரை வரை காரிலும், பின்னர் அங்கிருந்து விமானம் மூலமும் இலங்கைக்கு பத்திரமாக திருப்பி அனுப்பி வைத்தனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications