சிங்கள தொழில் அதிபரை தூத்துக்குடியில் இருந்து திருப்பி அனுப்பிய போலீசார்
தூத்துக்குடி: இலங்கையில் இருந்து தமிழகம் வந்த புத்த பிச்சுகள் தாக்கப்பட்ட சம்பவத்தையடுத்து தூத்துக்குடியில் தங்கியிருந்த சிங்கள தொழில் அதிபரை போலீசார் பாதுகாப்பாக திருப்பி அனுப்பினர்.
இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு வரும் சிங்களர்கள் தாக்கப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதனால் தமிழகம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். அண்மையில் இலங்கையில் இருந்து தமிழகம் வந்த புத்த பிச்சுகள் தாக்கப்பட்டனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த 5 சிங்கள மீனவர்களை போலீசார் பலத்த பாதுகாப்புடன் தூத்துக்குடியில் இருந்து ராமநாதபுரம் கொண்டு சென்றனர். அங்குள்ள நீதிமன்றத்தில் அவர்கள் ஆஜர்படுத்தப்பட்டு ஸ்ரீவைகுண்டம் கிளை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே தூத்துக்குடி கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள ஒரு ஹோட்டலில் சிங்கள தொழில் அதிபரான லாலாசி நானாதி ரனதுங்கே என்பவர் தங்கியிருந்தார். மாலத்தீவு மற்றும் இலங்கையில் 1கே20 என்ற பெயரில் உப்பு மார்க்கெட்டிங் கம்பெனி வைத்துள்ள அவர் கடந்த 18ம் தேதி தூத்துக்குடி வந்துள்ளார். அங்கு தொழில் நிமித்தமாக லோகேஷ் என்பவரை சந்தித்து விட்டு நாளை இலங்கை திரும்ப இருந்தார்.
இந்நிலையில் போலீசார் அவர் தங்கியிருந்த ஹோட்டலுக்கு சென்று அவரிடம் நிலைமையை எடுத்துக் கூறி முன்னெச்சரிக்கையாக அவரை மதுரை வரை காரிலும், பின்னர் அங்கிருந்து விமானம் மூலமும் இலங்கைக்கு பத்திரமாக திருப்பி அனுப்பி வைத்தனர்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications