இலங்கை பொருட்களை புறக்கணிக்க வலியுறுத்தி சென்னை மெரீனாவில் பிரச்சாரம்
சென்னை: தமிழகத்தில் இலங்கை பொருட்களை புறக்கணிக்க வலியுறுத்தி சென்னை மெரீனா கடற்கரையில் தமிழர் பண்பாட்டு நடுவம் சார்பில் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தமிழர்களைப் படுகொலை செய்த இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்பது தமிழகத்தின் ஒட்டுமொத்த கோரிக்கை. ஆனால் மத்திய அரசோ இதை கொள்ளவில்லை. இதற்கு எதிராக இலங்கையுடனான வர்த்தக உறவுகளை விரிவுபடுத்தி வருகிறது.
இந்நிலையில் தமிழகத்தில் இலங்கைப் பொருட்களை பயன்படுத்துவதை கைவிட வலியுறுத்தி பிரச்சாரம் மேற்கொள்ள தமிழர் பண்பாட்டு நடுவம் முயற்சிகளை மேற்கொண்டது. தமிழகத்தில் பல கடைகளில் இலங்கையில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பிஸ்கட், பழங்கங்கள், இறைச்சி, பருத்டி ஆயத்த ஆடைகள் விற்பனைக்கு வந்திருக்கின்றன.

வரிச்சலுகை
இலங்கையில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு இந்திய அரசு வரிச் சலுகை அளித்திருக்கிறது. இதனால் தமிழக சந்தைக்கு வரும் பொருட்கள் மூலம் இலங்கையின் பொருளாதாரம் பலப்படுகிறது.

ஆயுதக் குவிப்பு
இந்திய அரசின் வரிச்சலுகைகள் மூலம் பொருளாதார பலம் பெறுகிற இலங்கை ஆயுதங்களை வாங்கிக் குவித்து தமிழர்களை படுகொலை செய்கிறது. மேலும் தமிழர் பகுதிகளில் இலங்கை ராணுவம் நிரந்தர முகாமிட்டு தமிழர்களுக்கு கொடும் துன்பம் இழைக்கிறது. இந்த நிலையில் இலங்கையின் ஏற்றுமதி பெருகுவது தமிழருக்கு நன்மையானது அல்ல.

பொருளாதாரத் தடை
இலங்கையின் ஏற்றுமதி சந்தையை முடக்குவது தான் இலங்கையின் மீதான தமிழக அரசின் பொருளாதாரத் தடையை மேலும் வலுப்படுத்தும். இதற்காகவே இலங்கையின் உற்பத்தி பொருட்களை தமிழக தமிழர்கள் யாரும் வாங்க வேண்டாம் என்று தமிழர் பண்பாட்டு நடுவம் பிரச்ச்சாரத்தில் ஈடுபட்டது.

எப்படி பிரச்சாரம்?
இலங்கையில் இருந்து தயாரித்து வரும் சில திண்பண்டங்களை எடுத்துக் கொண்டு போய் மக்களிடம் காட்டி அதை அவர்கள் வாங்கக் கூடாது என்று பிரச்சாரம் செய்தது தமிழர் பண்பாட்டு நடுவம். இலங்கை தயாரிப்பு என்ற எந்த பொருட்களில் எழுதப்பட்டிருந்தாலும் அவற்றை தமிழர்கள் வாங்கக் கூடாது என்றும் பிரச்சாரம் செய்திருக்கின்றனர்.

பிற மாநில மக்களும்..
இந்தியாவில் இருந்து வந்த பிற மாநிலத்தவரும் கூட இலங்கை சேவைகள் மற்றும் பொருட்களை புறக்கணிப்போம் என்று ஒரு படிவத்தில் கையெழுத்து கையெழுத்திட்டு உறுதி அளித்திருக்கின்றனர். இது தொடர்பான துண்டறிக்கைகளும் விநியோகம் செய்யப்பட்டன.
-
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications