சென்னையில் உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி: ஜெயலலிதா ரூ.29 கோடி நிதி
சென்னை: சென்னையில் வரும் நவம்பர் மாதம் நடக்கும் உலக செஸ் சாம்பியன் போட்டிக்காக முதல்வர் ஜெயலலிதா ரூ.29 கோடி நிதி ஒதுக்கியுள்ளார்.
இது குறித்து சட்டசபையில் விதி 110-ன் கீன் ஜெயலலிதா படித்தளித்த அறிக்கை வருமாறு,
கடந்த 2011ம் ஆண்டு உலக செஸ் கூட்டமைப்பின் தலைவரான கிர்ஸன், என்னை தலைமைச் செயலகத்தில் சந்தித்து 2012ம் ஆண்டுக்கான உலக செஸ் சாம்பியன் போட்டியை சென்னையில் நடத்துமாறு கேட்டுக் கொண்டார். இதையடுத்து இதுவரை இந்தியாவில் நடைபெறாத இந்த செஸ் போட்டியினை ரூ.20 கோடி செலவில் நடத்த ஒப்புதல் அளித்தேன்.
ஆனாலும், இந்தப் போட்டியை நடத்துவதற்காக நடத்தப்பட்ட ஏலத்தில் அதிகத் தொகையை ரஷியா குறிப்பிட்டதால் கடந்த ஆண்டுக்கான உலக செஸ் சாம்பியன் போட்டி ரஷியாவில் நடைபெற்றது.
கடந்த ஆண்டுக்கான போட்டியை நடத்த தமிழகம் முன்வந்ததைக் கருத்தில் கொண்டு இந்த ஆண்டு நவம்பர் 6 முதல் 26ம் தேதி வரை நடைபெறவுள்ள உலக செஸ் சாம்பியன் போட்டியினை ஏல முறையின்றி சென்னையில் நடத்த உலக செஸ் சாம்பியன் கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.
இந்த வேண்டுகோளை ஏற்று வரும் நவம்பரில் நடைபெறவுள்ள உலக செஸ் சாம்பியன் போட்டியை சென்னையில் நடத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கென ரூ.29 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். இந்தப் போட்டிகள் ஐந்து முறை செஸ் சாம்பியனான தமிழகத்தைச் சேர்ந்த உலக செஸ் சாம்பியன் கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் மற்றும் இப்போதைய உலகத் தர வரிசையில் முதல் சதுரங்க வீரராகவும், தர வரிசைப் பட்டியலில் இதுவரை உயர்ந்த அளவில் 2 ஆயிரத்து 872 புள்ளிகள் பெற்று முன்னிலையில் உள்ள நார்வே நாட்டைச் சேர்ந்த மேக்னஸ் கார்ல்சன் ஆகியோருக்கும் இடையே நடைபெறும்.
சர்வதேச அளவிலான இதுபோன்ற போட்டிகள் சென்னையில் நடத்தப்படுவதன் மூலம் இளைய சமுதாயத்தினர் இடையே செஸ் விளையாட்டினை பயில்வதற்கான ஆர்வம் மேலும் அதிகரிக்கும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
பிளஸ் 2 முடிச்சிருக்கீங்களா! Apprentice training -ல் சேருங்க! மாதம் ரூ 18 ஆயிரம் ஊக்கத்தொகை பெறுங்க! -
சென்னையில் நாளை பல்வேறு இடங்களில் மின்தடை.. பல்லாவரம் டூ ராமாபுரம்.. முழு விவரம் -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
பயணிகள் கவனத்திற்கு.. சென்னை கோட்டத்தில் பராமரிப்பு பணி.. இன்றுமுதல் வைகை உள்ளிட்ட 7 ரயில்கள் தாமதம் -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம்












Click it and Unblock the Notifications