புனே ஜெர்மன் பேக்கரி குண்டு வெடிப்பு- தீவிரவாதி ஹிமாயத் குற்றவாளி - கோர்ட் தீர்ப்பு!

2010ஆம் ஆண்டு புனே நகரில் வெளிநாட்டவர் அதிகம் கூடும் ஜெர்மன் பேக்கரியில் இரவு 7 மணிக்கு பயங்கர குண்டு வெடித்தது. இதில் 17 பேர் பலியாகினர். 64 பேர் படுகாயமடைந்தனர். இந்த வழக்கில் ஹிமாயத் பெய்க் என்பவன் மட்டுமே சிக்கினான். மேலும் 5 பேர் தொடர்ந்தும் தலைமறைவாக உள்ளனர்.
இலங்கை தலைநகர் கொழும்பில் புனே ஜெர்மன் பேக்கரி குண்டு வெடிப்புக்கு சதித் திட்டம் தீட்டப்பட்டிருக்கிறது. மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடைய பயங்கரவாதி அபுஜிண்டால்தான் கொழும்பு புறநகர் பகுதியில் ஹிமாயத்துக்கு பயிற்சி கொடுத்திருக்கிறான். இது தொடர்பான தகவல்களை சிறப்பு போலீஸ் படையினர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த போலீசார் 2500 பக்கம் கொண்ட குற்றப்பத்திரிக்கையைத் தாக்கல் செய்தனர். இந்த வழக்கில் 103 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து நடைபெற்ற விசாரணை மார்ச் மாதம் முடிவடைந்து இன்று தீர்ப்பளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இன்று ஹிமாயத்தை குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும் ஹிமாயத்துக்கு என்ன தண்டனை என்பது வரும் 18-ந் தேதி அறிவிக்கப்படும் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications