நில மோசடி- போலி ஆவணம் மூலம் ஜாமீன்- சிக்கினார் தேமுதிக எம்.எல்.ஏ. அருண் சுப்பிரமணியன்!

திருவள்ளூர் நகராட்சிக்கு சொந்தமான நிலத்தை திருத்தணி தொகுதி தே.மு.தி.க. எம்.எல்.ஏ. அருண் சுப்பிரமணியன் அபகரித்தார் என்பது புகார். இது தொடர்பாக திருவள்ளூர் மாவட்ட நில அபகரிப்பு பிரிவில் நகராட்சி கமிஷனர் (பொறுப்பு) பார்த்தசாரதி புகார் செய்தார். இதைத் தொடர்ந்து எம்.எல்.ஏ. அருண் சுப்ரமணியன் 18.7.2012 அன்று கைது செய்யப்பட்டார்.இதைத் தொடர்ந்து அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்து அவர் ஜாமீனில் வெளியே வந்தார்.
இதன் பின்னர் திருவள்ளூர் மாவட்ட நில அபகரிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு வைத்திய லிங்கம் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனுதாக்கல் செய்தார். அதில், போலி ஆவணங்கள் தாக்கல் செய்து எம்.எல்.ஏ. அருண் சுப்பிரமணியம் ஜாமீன் பெற்றுள்ளார். அதனால் அவரது ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என்று கூறி இருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஆர்.சுப்பையா, எம்.எல்.ஏ. அருண் சுப்பிரமணியம் ஜாமீனை கடந்த 8-ந் தேதி ரத்து செய்து உத்தரவிட்டார்.
இதனால் மீண்டும் சிறைக்குப் போக வேண்டும் என்பதால் எம்.எல்.ஏ. அருண் சுப்பிரமணியன் தலைமறைவானார். அவரது வீடு உள்ளிட்ட பல இடங்களில் போலீசார் சோதனை நடத்தினர். அவரைப் பிடிக்க தனிப்படை போலீசாரும் அமைக்கப்பட்டனர் இந்நிலையில் ஆந்திர மாநிலம் மந்த்ராலயாவில் பதுங்கி இருந்த அருண்சுப்பிரமணியனை இன்று போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications