ஈராக்கில் தொடர் குண்டு வெடிப்பு.... 31 பேர் பலி
பாக்தாத்: ஈராக்கில் தீவிரவாதிகள் நடத்திய கார்குண்டு தாக்குதல் சம்பவத்தில் 31 பேர் பலியாகினர்.
ஈராக்கில் வரும் 20-ம் தேதி மாகாணத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலுக்கு எதிர்ப்பு தெரிவித்து தலைநகர் பாக்தாத் உள்ளிட்ட 18 இடங்களில் இன்று காலை தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.
சதாம் உசேனை ஆட்சியில் இருந்து அகற்றுவதற்காக போரிட்ட அமெரிக்கப்படை 2011-ம் ஆண்டு ஈராக்கிலிருந்து வெளியேறியது. அதன்பிறகு அமைந்த ஷியா முஸ்லிம்கள் தலைமையிலான ஆட்சிக்கு எதிராக அல்கொய்தாவுடன் தொடர்புடைய சன்னி முஸ்லிம்களின் தீவிரவாத இயக்கத்தினர் இந்த தாக்குதலை நடத்தியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
அடுத்தடுத்து குண்டு வெடிப்பு
தலைநகர் பாக்தாத்தில் பரபரப்பான காலை நேரத்தில் சோதனைச்சாவடி அருகே இரு கார் குண்டுகள் வெடித்தன. இதில் 10 பேர் கொல்லப்பட்டனர்.
அதேபோல் துஸ் குர்மாத் நகரின் சாலையில் மூன்று இடங்களில் அடுத்தடுத்து கார்குண்டுகள் வெடித்தன. இதில் 6 பேர் கொல்லப்பட்டனர். 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
வடக்குப்பகுதியின் கிர்குக் நகரில் இரண்டு கார் குண்டுகள் வெடித்ததில் 9 பேர் கொல்லப்பட்டனர். 17 பேர் படுகாயமடைந்தனர்.
ஈராக்கின் மொத்தம் 18 இடங்களில் இன்று துப்பாக்கிகள், குண்டுகள் கொண்டு தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். பிற்பகல் நிலவரப்படி மொத்தம் 31 பேர் இறந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications