சஞ்சய் தத் சரணடைய மேலும் 4 வாரம் அவகாசம்- உச்சநீதிமன்றம்

1993-ம் மும்பையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு வழக்கில், ஆயுதங்கள் பதுக்க உதவியதாக நடிகர் சஞ்சய் தத் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் அவருக்கு 6 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
அதில் 18 மாதங்களை சிறையில் கழித்துவிட்ட அவர், உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். இதில் அவருக்கான தண்டனைக் காலம் 5 ஆண்டுகளாகக் குறைக்கப்பட்டது.
இன்னும் மூன்றரை ஆண்டுகளை அவர் சிறையில் கழித்தாக வேண்டும். இதில் அவர் ஏப்ரல் 18-ம் தேதிக்குள் போலீசில் ஆஜராக வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்தத் தீர்ப்பை ஏற்றுக் கொள்வதாகக் கூறிய சஞ்சய் தத், தான் சரணடைய மேலும் அவகாசம் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு செய்தார். தன்னை நம்பி ரூ 278 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளதாகவும், அந்தப் படங்களை முடித்துக் கொடுத்துவிட்டு சரணடைவதாகவும் அவர் கோரியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதின்றம், சஞ்சய் தத்துக்கு மேலும் 4 வார காலம் அவகாசம் அளித்துள்ளது.
தனது தீர்ப்பில், "இதற்கு மேல் சஞ்சய் தத் எந்த அவகாசமும் கோரக் கூடாது. அதற்கு அவருக்கு உரிமையில்லை," என்று கண்டிப்பாக உத்தரவிட்டுள்ளது.
ஆனால் இந்த தீர்ப்புக்கு நீதிமன்றத்திலேயே சிபிஐ கடுமையாக ஆட்சேபம் தெரிவித்தது. அதேநேரம், ஏன் நீங்கள் சஞ்சய் தத் மனுவை ஆட்சேபித்து மனு தாக்கல் செய்யவில்லை என்ற நீதிபதியின் கேள்விக்கு பதில் சொல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications