இந்தியாவில் சிறுமிகள் பாலியல் கொடுமை... 10 ஆண்டுகளில் 336 சதவிகிதம் அதிகம்
டெல்லி: இந்தியாவில் பெண்களுக்கும், சிறுமிகளுக்கும் எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வருவதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் 336 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக கூறி அதிரவைக்கிறது தேசிய குற்றப்பிரிவு அமைப்பின் புள்ளிவிபரம்.
டெல்லியில் ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிரிழந்த பின் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் பற்றிய விழிப்புணர்வு அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் 3 வயது முதல் 10 வயது வரை உடைய சிறுமிகளும் அதிக அளவில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுகின்றனர். அதுபற்றி அதிர்ச்சிகரமான புள்ளிவிபரம் ஒன்றை வெளியிட்டுள்ளது தேசிய குற்றப்பிரிவு ஆணையம்.

சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக, கடந்த 2001-ஆம் ஆண்டு பதிவான வழக்குகளின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 113. இதுவே 2011-ஆம் ஆண்டு 48 ஆயிரத்து 338 ஆக அதிகரித்துள்ளது.
மத்தியபிரதேசம் நம்பர் 1
மத்திய பிரதேச மாநிலத்தில் அதிகப்படியாக 9 ஆயிரத்து 465 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. அடுத்தப்படியாக மகாராஷ்டிராவில் 6 ஆயிரத்து 868 வழக்குகளும் பதிவாகியுள்ளன.
டெல்லியில் 2,909 வழக்குகள்
தலைநகர் டெல்லியில் 2ஆயிரத்து 909 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது. தென் மாநிலங்களில் கேரளாவில் 2 ஆயிரத்து 101 வழக்குகளும், ஆந்திராவில் 3 ஆயிரத்து 977 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 1,486 வழக்குகள்
தமிழ்நாட்டை பொறுத்தவரை கடந்த 10 ஆண்டுகளில் ஆயிரத்து 486 சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாக காவல்துறையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரியில் 41 வழக்குகள் பதிவாகியுள்ளன. இந்த வழக்குகள் அனைத்தும் சிறார் குற்றவியல் நீதிமன்றங்களில் பதிவு செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டவை ஆகும்.
5 வயது சிறுமி பாதிப்பு
டெல்லி காந்தி நகர் பகுதியைச் சேர்ந்த 5 வயது சிறுமியை இரண்டு நாட்களாக அறைக்குள் பூட்டி வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமி உயிருக்கு ஆபத்தான நிலையில் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறாள்.
பிரதமர் மன்மோகன் சிங் கவலை
இதனிடையே 5 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டிருப்பதும், அவர் உயிருக்குப் போராடிக்கொண்டிருப்பதும் தன்னை மிகவும் வேதனையடையச் செய்திருப்பதாக பிரதமர் தெரிவித்துள்ளார். இந்த பிரச்சனைக்கு ஆழமான தீர்வு காண்பதும் அதற்காக சமூகம் தன்னைத்தானே தயார்படுத்திக்கொள்வதும் அவசியம் என பிரதமர் கூறியுள்ளார்.
-
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications