ரூ.27 ஆயிரம் கோடி இழப்பு: அஜித்பவார் ராஜினாமா செய்ய ஆம் ஆத்மி கட்சி வலியுறுத்தல்
மும்பை: நீர்ப்பாசன திட்டங்களில் ரூ.27 ஆயிரம் கோடி இழப்பை தொடர்ந்து மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் அஜித் பவார் ராஜினாமா செய்ய வேண்டும் என்று ஆம் ஆத்மி கட்சி வலியுறுத்தி உள்ளது.
இதுகுறித்து அந்த கட்சியின் செய்தி தொடர்பாளர் பிரீத்தி ஷர்மா மேனன் மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய போது,
27 ஆயிரம் கோடி நஷ்டம்
மகாராஷ்டிராவில் நீர்ப்பாசன திட்டங்களில் ரூ.27 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டு இருப்பதாக மத்திய கணக்கு தணிக்கை அதிகாரி அறிக்கையில் தெரியவந்து உள்ளது. ரூ. 7 ஆயிரம் கோடியில் நிறைவேற்றப்பட வேண்டிய நீர்ப்பாசன திட்டங்களை தாமதப்படுத்தியதன் காரணமாக இந்த அளவுக்கு இழப்பீடு ஏற்பட்டு இருக்கிறது
ஊழல் புகார்
நிறுவனம் ஒன்றிடம் இருந்து லஞ்சம் வாங்கப்பட்டதும் அறிக்கையின் மூலம் தெரியவந்து உள்ளது. நீர்ப்பாசன திட்டங்களில் ஏராளமாக முறைகேடு நடந்து உள்ளது. இதற்கு நீர்ப்பாசன இலாகாவை கவனித்து வரும் துணை முதலமைச்சர் அஜித் பவார் பொறுப்பு ஏற்க வேண்டும். அவர் இனியும் பதவியில் நீடிக்க தகுதியற்றவர். உடனடியாக அவர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.
நீதி விசாரணை
மேலும் நீர்ப்பாசன ஊழலில் அஜித்பவாரின் பங்கு பற்றி நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். பாரபட்சமற்ற முறையில் விசாரணை நடைபெற வேண்டும். திட்டங்களை நிறைவேற்றுவதில் தவறான திட்டமிடுதல் காரணமாக அரசின் கருவூலத்துக்கு மட்டும் வறட்சி ஏற்படவில்லை. நமது மண்ணுக்கும் வறட்சி ஏற்பட்டு உள்ளது. நீர்ப்பாசன திட்ட ஊழலில் அனைத்து கட்சியினரும் ஈடுபட்டு உள்ளனர். ஊழல் அரசியல்வாதிகளை மக்கள் புறக்கணிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி












Click it and Unblock the Notifications