திருச்செந்தூர் கோயிலில் அர்ச்சகர்கள்- பணியாளர்கள் அடிதடி
திருச்செந்தூர்: திருச்செந்தூர் கோயிலில் அர்ச்சகர்கள் மற்றும் பணியாளர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இது தொடர்பாக இரு தரப்பினர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோயிலுக்கு தினமும் பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். பக்தர்கள் வசதிக்காக பொது தரிசனம், கட்டண தரிசனம் ஆகிய இரு வழிகள் உள்ளன. 100 ரூபாய் டிக்கெட் எடுத்தால் தனி வழியாக சென்று சுவாமியை தரிசிக்கலாம். பொது வழியாக சென்றால் பல மணி நேரம் காத்திருக்க வேண்டி வரும்.
ரதவீதியை சேர்ந்த சங்கரன் மகன் சரவணன். அர்ச்சகரான இவர் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு தேங்காய் உடைத்து கொடுப்பார். இவரது உறவினர் லட்சுமணன் என்பவரும் இதே பணியை செய்து வருகிறார்.
இந்நிலையில் சரவணனின் உறவினர் முத்துலட்சுமி என்பவர் தரிசனம் செய்வதற்காக ரூ.100 டிக்கெட் எடுக்க வரிசையில் நின்ற போது அவரை தடுத்து வேறு வழியாக செல்லும்படி எழுத்தர் செந்தில் குமார் கூறியுள்ளதாக தெரிகிறது. இது குறித்து லட்சுமணனும், சரவணனும் அவரை கண்டித்துள்ளனர். இதில் தகராறு ஏற்பட்டதால் இருவருக்கும் காயம் ஏற்பட்டது. இதையடுத்து இருவரும் திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
இவர்கள் கொடுத்த புகாரின பேரில் செந்தில்குமார் உள்ளிட்ட இருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதே போல் செந்தில் குமார் கொடுத்த புகாரின் பேரில் அர்ச்சகர்கள் ஜெயமாலினி குமார், மகராஜன் சுப்பையன், கிருஷ்ணமூர்த்தி, தர்மர் உள்பட 34 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்நிலையில் செந்தில்குமாரை தாக்கியவர்களை கைது செய்ய கோரி திடீரென பணியாளர்கள் போராட்டத்தில் குதித்தனர். இதையடுத்து அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
-
ஆலங்குளம் அருகே 6 பேர் அரிவாளால் வெட்டப்பட்ட வழக்கில் ஷாக்.. ஒருவரை சுட்டுப் பிடித்தது போலீஸ்! -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications