மாற்றுத் திறனாளிகளுக்கான கல்வி உதவித்தொகையை 2 மடங்காக உயர்த்திய ஜெயலலிதா
சென்னை: மாற்றுத் திறனாளிகளுக்கான கல்வி உதவித் தொகையை முதல்வர் ஜெயலலிதா 2 மடங்காக அதிகரித்து உத்தரவிட்டுள்ளார்.
முதல்வர் ஜெயலலிதா இன்று சட்டசபையில் 110வது விதியின் கீழ் அறிக்கை ஒன்றை வாசித்தார்.
அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது,
மாற்றுத் திறனாளிகளை மனித சமுதாயத்தின் ஓர் அங்கமாக அனைவரும் அங்கீகரிக்கும் வகையிலும், நாட்டின் வளர்ச்சியில் மாற்றுத் திறனாளிகளின் பங்கேற்பினை உறுதி செய்யும் வகையிலும், ஏனைய மக்களுக்கு இணையாக மாற்றுத் திறனாளிகள் வாழும் வண்ணமும் எனது தலைமையிலான அரசு திட்டங்களைத் தீட்டி செயல்படுத்தி வருகிறது.
மாற்றுத் திறனாளி மாணவ-மாணவியர் கல்வி பயில்வதை ஊக்கப்படுத்தும் வகையில் 1 முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவியருக்கு 500 ரூபாயும், 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவியருக்கு 1500 ரூபாயும், 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவியருக்கு 2000 ரூபாயும், இளங்கலை பட்டப்படிப்பு பயிலும் மாணவ-மாணவியருக்கு 3000 ரூபாயும், பட்ட மேற்படிப்பு மற்றும் தொழிற்கல்வி பயிலும் மாணவ-மாணவியருக்கு 3500 ரூபாயும் கல்வி உதவித் தொகையாக ஆண்டுதோறும் தற்போது வழங்கப்பட்டு வருகிறது.
மாற்றுத் திறனாளி மாணவ-மாணவியர் கல்வி கற்பதை மேலும் ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு வழங்கப்படும் கல்வி உதவித் தொகை நடப்பாண்டு முதல் இரு மடங்காக உயர்த்தி வழங்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
இதன் மூலம் 23,454 மாற்றுத் திறனாளி மாணவ-மாணவியர் பயன்பெறுவர். இதனால் அரசுக்கு ஆண்டு ஒன்றுக்கு 3 கோடியே 6 லட்சம் ரூபாய் கூடுதல் செலவு ஏற்படும். தற்போது இரு கால்களும் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட 400 பெட்ரோல் ஸ்கூட்டர்கள் கல்வி பயிலும் மாற்றுத் திறனாளி மாணவ-மாணவிகளுக்கு முன்னுரிமையிலும், எஞ்சிய ஸ்கூட்டர்கள் பணிபுரியும் மற்றும் சுயதொழில் புரியும் மாற்றுத் திறனாளிகளுக்கு விலையில்லாமல் வழங்கப்பட்டு வருகிறது.
இத்திட்டத்திற்கு நல்ல வரவேற்பு உள்ளதால், பயனாளிகளின் எண்ணிக்கை தற்போதுள்ள 400 இல் இருந்து 1000 ஆக உயர்த்தப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இதற்கென ஆண்டொன்றிற்கு 5 கோடியே 50 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
மாவட்டத் தலைநகரங்களில் 6 வயது வரை உள்ள மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கென 32 ஆரம்ப பயிற்சி மையங்களும், செவித்திறன் குறையுடைய குழந்தைகளுக்கென 32 ஆரம்ப நிலை பயிற்சி மையங்களும், பார்வைத்திறன் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கென 18 ஆரம்ப நிலை பயிற்சி மையங்களும் செயல்பட்டு வருகின்றன.
இதில் பயன்பெறும் குழந்தைகளுக்கும் அவர்களது துணையாளர்களுக்கும் போக்குவரத்து பயணச் சலுகை வழங்கப்பட்டாலும், கடுமையாகப் பாதிக்கப்பட்ட குழந்தைகள் இம்மையங்களுக்கு தொடர்ந்து வருவது சிரமமாக உள்ளதால், இம்மையங்களின் முழு பயனையும் அவர்களால் பெற இயலவில்லை.
எனவே, மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கென 32 நடமாடும் சிகிச்சைப் பிரிவுகள் தொடங்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த சிகிச்சைப் பிரிவு ஓர் ஊர்தியில் இயன்முறை சிகிச்சைக் கருவியுடன் செயல்படும்.
இச்சிகிச்சைப் பிரிவு மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர்களின் கண்காணிப்பில், பல்நோக்கு மறுவாழ்வு உதவியாளர் மற்றும் முட நீக்கு வல்லுநர் ஆகியோரைக் கொண்டு செயல்படும்.
இத்திட்டத்திற்கென தொடராச் செலவினமாக 3 கோடியே 52 லட்சம் ரூபாயும், தொடர் செலவினமாக 97 லட்சம் ரூபாயும் என மொத்தம் 4 கோடியே 49 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பார்வையற்ற மாற்றுத் திறனாளி மாணவ-மாணவியரின் கல்வி அறிவை மேம்படுத்தும் வகையில், 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவியருக்கு 1500 ரூபாயும், இளங்கலை பட்டப்படிப்பு பயிலும் மாணவ-மாணவியருக்கு 2500 ரூபாயும், பட்ட மேற் படிப்பு மற்றும் தொழிற்கல்வி பயிலும் மாணவ-மாணவியருக்கு 3000 ரூபாயும் என வாசிப்பாளர் உதவித் தொகை ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது.
நடப்பாண்டு முதல் இந்த வாசிப்பாளர் உதவித் தொகை இரு மடங்காக உயர்த்தி வழங்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இதன் மூலம் 1500 பார்வையற்ற மாணவ மாணவியர் பயன்பெறுவர். இதனால் அரசுக்கு ஆண்டொன்றிற்கு 19 லட்சம் ரூபாய் கூடுதல் செலவினம் ஏற்படும்.
எனது தலைமையிலான அரசின் இந்த நடவடிக்கைகள் மாற்றுத் திறனாளிகளின் வாழ்வில் மறுமலர்ச்சியை ஏற்படுத்த வழிவகுக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம் -
ஜான் ஆரோக்கியசாமி போட்ட மெகா ஸ்கெட்ச்.. மிரண்டு போன பாஜக மேலிடம்.. B டீம் முத்திரையை உடைப்பாரா விஜய் -
திரிஷா சர்ச்சை அடங்குவதற்குள் மீண்டும் பரபரப்பு… காதல், கள்ளக்காதல் பற்றி பார்த்திபன் ஓபனாக பேச்சு -
அதிமுக எம்பியாக இருந்தபோதே கனிமொழி அக்கா எனக்கு பயிற்சி கொடுத்தார்.. ஓ.பி. ரவீந்திரநாத் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை பழிதீர்த்த கர்மா.. முத்துவால் ஏற்பட்ட குழப்பம்.. சந்தோஷத்தில் ரோகிணி -
மீண்டும் தள்ளிப்போகும் தேர்தல் தேதி அறிவிப்பு.. பின்னணியில் 3 காரணங்கள்.. தமிழகம் உள்பட 5 மாநில வாக்குப்பதிவு எப்போது? -
தவெகவில் பணக்கஷ்டம்.. ரூ.5 கோடி செலவு செய்ய வேட்பாளர்கள் இல்லை.. கூட்டணி செல்வது தான் சரி.. விஜய்க்கு அழுத்தம் -
Rasi Palan: கடகம், சிம்மம், கன்னிக்கு மார்ச் மாதத்தில் அடிக்குமா ஜாக்பாட்.. முழு பலன்கள் விவரம் -
அதில் இருந்தது கோழி கால் இல்லை.. சொமாட்டோ பிரியாணி பார்சலில் இருந்தது? அலற விட்ட 28 நிமிட வீடியோ -
சிங்காநல்லூர் வாய்ப்பில்லை.. பல்லடம் தொகுதியில் அண்ணாமலையை நிற்க சொல்லுங்க.. மறுக்கும் அதிமுக! -
Rasi Palan: துலாம், விருச்சிகம், தனுசு ராசிக்கான மார்ச் மாத பலன்.. முழு விவரம் இதோ -
வேளச்சேரி- பரங்கிமலை ரயில்.. மிகப்பெரிய சம்பவத்தை 'சைலண்ட்' ஆக செய்த மத்திய அரசு.. பின்னணி












Click it and Unblock the Notifications