ஃபேஸ்புக் பதிவர்களை உயர் போலீஸ் அதிகாரி அனுமதியின்றி கைது செய்யக் கூடாது: சுப்ரீம் கோர்ட்
டெல்லி: சமூக வலைதளமான ஃபேஸ்புக்கில் கருத்துகளை பதிவிடுவோரை உயர் போலீஸ் அதிகாரியின் அனுமதி இல்லாமல் கைது செய்யக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது.
வழக்கு என்ன?
ஆந்திர மாநிலத்தில் மக்கள் சிவில் உரிமைக் கழகத்தைச் சேர்ந்த ஜெய விந்தியாலா என்பவர் ஃபேஸ்புக்கில் ஆந்திர முன்னாள் முதல்வரும் தமிழக ஆளுநருமான ரோசைய்யா, காங்கிரஸ் எம்.எல்.ஏ. கிருஷ்ண மோகன் ஆகியோரை விமர்சித்து ஃபேஸ்புக்கில் கருத்துகளைப் பதிவிட்டிருந்தார். கிருஷ்ணமோகனின் மோசடிகளுக்கு முதல்வராக இருந்த ரோசையா உடந்தை என்கிறது அந்தப் பதிவு. இதனால் கிருஷ்ணமோகனின் புகாரின் அடிப்படையில் விந்தியாலா கைது செய்யப்பட்டார்.
உச்சநீதிமன்றத்தில்..
இதை எதிர்த்து விந்தியாலா உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதேபோல் மும்பையை சட்டக்கல்லூரி மாணவி ஸ்ரேயா சிங்காலும் ஃபேஸ்புக்கில் பதிவிடுவதற்காக கைது செய்யப்படுவதை எதிர்த்து ஒரு வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்குகள் மீது உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெற்றது. அப்போது சமூக வலைதளங்களில் பதிவு செய்யும் கருத்துக்களுக்காக கைது செய்யும் விவகாரத்தில் அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி உயர் போலீஸ் அதிகாரியின் அனுமதியைப் பெற்றுதான் கைது செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications