தமிழகத்தில் 100 நாள் வேலைத்திட்டத்தில் போலி ஆட்கள்... சம்பளத்தில் ஊழல்: சி.ஏ.ஜி அறிக்கை
சென்னை: தமிழகத்தில் 100 நாள் வேலைத் திட்டத்தில் ஊழல் நடைபெற்றுள்ளதாகவும், கூலி மற்றும் போலி ஆட்கள் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் சி.ஏ.ஜி. எனப்படும் மத்திய தணிக்கைத் துறை தலைவரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் நிதி நிலை, பொருளாதாரம், வருவாய், உள்ளாட்சி அமைப்புகளின் செயல்பாடு, பொது மற்றும் சமூகத் துறைகள் ஆகியவற்றின் 2011 - 12ம் ஆண்டுக்கான தணிக்கை குறித்து இந்தியக் கணக்காய்வு மற்றும் தணிக்கைத் துறைத் தலைவரின் அறிக்கைகள் சட்டப்பேரவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டன.
அதில், தமிழகத்தில் நூறு நாள் வேலைத் திட்டத்தில் 24 சதவிகித குடும்பங்களே முழுமையாக பயனடைந்தன என்றும், பதிவு செய்த 76 லட்சத்து 49 ஆயிரம் குடும்பங்களில் 14 லட்சத்து 8 ஆயிரம் குடும்பங்களே முழுப் பயனடைந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
நிர்ணயிக்கப்பட்ட தினக் கூலி பயனாளிகளுக்கு வழங்கப்படவில்லை என்றும், 90 ரூபாய் முதல் 119 ரூபாய் என்ற அடிப்படையில் வழங்க வேண்டிய தினக்கூலியை 72 ரூபாய் முதல் 83 ரூபாய் என்ற அடிப்படையிலே வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தினக் கூலி பட்டியலில் போலியான ஆட்களின் பெயர்களைச் சேர்ந்து திட்ட நிதி கையாடப்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
வரி ஏய்ப்புக்குரிய பொருட்கள் குறித்து கண்காணிப்பு அமைப்பு இல்லை என்றும், இதன் காரணமாக அரசுக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 10 மாநகராட்சிகள், 56 நகராட்சிகள், 64 பேரூராட்சிகள் 2009 - 2010ம் ஆண்டுக்கான கணக்குகளை அளிக்கவில்லை என்று அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 5 மாவட்டங்களில் பேரிடர் மேலாண்மை ஆணையங்கள் ஒரு முறை கூடவில்லை என்றும், பேரிடர் மேலாண்மை விதிகள் மாநில அரசால் இன்னும் வகுக்கப்படவில்லை என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. நாகையில் முன்னெச்சரிக்கை சாதனங்கள் இயங்கும் நிலையில் இல்லை என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சாகுபடி நிலங்கள் பிற காரணங்களுக்காக மாற்றப்படுவதை தடுக்க எவ்வித கட்டுப்பாடும் இல்லாததால், 2007ம் ஆண்டு 24 லட்சம் ஏக்கராக இருந்த பயிரிடப்படாத நிலம் 2010ம் ஆண்டில் 25 லட்சத்து 95 ஆயிரமாக உயர்ந்து விட்டதாக கூறப்பட்டுள்ளது. இதுபோல் தணிக்கை துறை அறிக்கையில் பல்வேறு திட்டங்கள் குறித்து விமர்சிக்கப்பட்டுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications