திருமண மண்டபங்களாக உருமாறும் மாயாவதி அமைத்த நினைவு மண்டபங்கள்: அகிலேஷ் அறிவிப்பு
Subscribe to Oneindia Tamil

உத்தரபிரதேச மாநிலம், பவுரி கிராமத்தில் நேற்று சுதந்திர போராட்ட வீரரும் முன்னாள் எம்.எல்.ஏ.-வுமான கன்ஜி பிரசாத் யாதவ்-வின் 16ம் ஆண்டு நினைவு நிகழ்ச்சி நடை பெற்றது. அதில், அம்மாநில முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் பங்கேற்றார்.
விழாவில் அவர் பேசியதாவது:-
மாயாவதி ஆட்சி காலத்தில் மக்கள் வரிப் பணத்தை வீணடித்து உருவாக்கப்பட்ட நினைவு மண்டபங்கள், பூங்காக்கள் ஆகியவற்றை ஆஸ்பத்திரிகளாக மாற்றலாம் என நாங்கள் சோதனை நடத்தினோம்.
ஆஸ்பத்திரி அமைப்பதற்கு அவை போதுமான இடவசதியுடன் இல்லை என்பது தெரியவந்தது. எனவே, அந்த மண்டபங்களையும், பூங்காக்களையும் திருமணம் மற்றும் ஏழைகள் குடும்பத்தின் சுபகாரியங்களுக்காக வாடகை ஏதுமின்றி இலவசமாக மக்களுக்கு வழங்க அரசு முடிவு செய்துள்ளது என அகிலேஷ் கூறினார்.












Click it and Unblock the Notifications