டாஸ்மாக் விளம்பரத்தில் ஜெ. படம் போட்ட தேமுதிக செயலாளர் கைது
நெல்லை: நெல்லையில் தேமுதிகவினர் முதல்வர் படத்துடன் கூடிய டாஸ்மாக் விளம்பர பேனர் வைத்த சம்பவம் தொடர்பாக தேமுதிக பகுதி செயலாளர் உள்பட 3 பேர்கைது செய்யப்பட்டனர்.
தமிழக அரசால் வழங்கப்பட்டும் வரும் நலத்திட்டங்களில் முதல்வர் ஜெயலிலதா படம் உள்ளது. அரசு சார்பில் துவங்கப்பட்டுள்ள சலுகை விலை உணவகங்கலிலும் அம்மா உணவகம் என பெயரிடப்பட்டுள்ளது. இதற்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் மற்றும் அவரது மனைவி பிரேமலதா ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் திருப்பூரில் நடந்த ஆர்ப்பாட்டத்தின் போது டாஸ்மாக் கடைக்கு அவரது பெயரை சூட்டி, மது பாட்டில்களில் அவரது படத்தை போட வேண்டியது தானே என்று விஜயகாந்த் பேசினார்.
இந்நிலையில் நெல்லை டவுன் கம்மாநதி காமாட்சி அம்மன்கோவில் பின்புறம் உள்ள டாஸ்மாக் கடை அருகே தேமுதிகவினர் ஒரு வைத்தனர். அதில் தமிழக முதல்வர் படத்துடன் டாஸ்மாக் கடை பார் வசதி உள்ளது என எழுதப்பட்டிருந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் அங்கு வந்து அதை அகற்றினர். டவுன் இன்ஸ்பெக்டர் முருகன் விசாரணை நடத்தி தேமுதிக பகுதிசெயலா ளர் மகாராஜன், துணை செயலாளர் கணேசன், வட்ட செயலாளர் சண்முகவேல் முருகன் ஆகியோரை கைது செய்தனர். இது தொடர்பாக மேலும் 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications