ஒரு ரூபாய் இட்லி சாப்பிட "அம்மா' உணவகத்தில் புகுந்த பாம்பு
சென்னை: "அம்மா' உணவகத்திற்குள் பாம்பு ஒன்று நுழைந்ததால், பெண் ஊழியர் ஒருவர் மயக்கமடைந்தார். பாம்பக் கண்ட பொதுமக்கள் அலறி அடித்து ஓடியதால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.
திருவொற்றியூர், தாங்கல், டி.எச்.,சாலையில், மாநகராட்சி மலிவு விலை உணவகம் ஒன்று உள்ளது. இங்கு, நேற்று மதியம் உணவுக்காக, பொதுமக்கள் பலர் காத்திருந்த போது, நல்ல பாம்பு ஒன்று, உணவகத்தில் புகுந்தது.
நல்ல பாம்பை உணவகத்தில் பணிபுரியும் பெண் ஊழியர் ஒருவர் பார்த்து விட்டார். பயத்தில் அலறியபடி அவர் மயக்கமடைந்து கீழே விழுந்தார். உடனடியாக, உணவகத்தில் இருந்த அனைவரும் பதறியடித்தபடி வெளியே ஓடினர்.
குளிர்பானம் கொடுத்து மயக்கமடைந்த ஊழியரின் மயக்கம் தெளிய வைக்கப்பட்டது. மலிவு விலை உணவகத்தில் பாம்பு புகுந்த செய்தி அறிந்து, உணவகம் முன் மக்கள் கூட்டம் அதிகளவில் கூடியது. அடுத்தகட்டமாக வன அலுவலர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
பின்னர், நான்கு வனச்சரக அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு வந்து, பல இடங்களில் தேடியும் பாம்பு பிடிபடவில்லை.












Click it and Unblock the Notifications