ரோட்டுக்கடைகளை அள்ளிச் சாப்பிட்ட அம்மா கேண்டீன்: அலைமோதும் மக்கள்... அதிகரிக்கும் வருவாய்
சென்னை: அம்மா கேண்டீனின் வருகையால் ரோட்டுக் கடைகளின் வியாபாரம் வெகுவாக பாதித்துள்ளதாம். அலைமோதும் வாடிக்கையாளர்களால் தினமும் வருவாய் கூடி வருகிறதாம்.
அதிலும் குறிப்பாக, காலையில் பொங்கல் போட ஆரம்பித்த பிறகு சூடு பிடித்துள்ளது வியாபாரம். அருகில் வசிப்போர், குறைந்த ஊதியத்தில் வேலை பார்ப்போர் மட்டுமின்றி சுவை மற்றும் தரத்தினால் பலதரப்பட்ட மக்களும் அம்மா கேண்டீன் ரசிகர்களாகி விட்டதென்னவோ உண்மைதான்.
விடுமுறையில் இருக்கும் பள்ளி, கல்லூரிகள் திறப்பிற்குப் பிறகு இன்னும் வியாபாரம் அதிகரிக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

200 அம்மா கேண்டீன்கள்...
சென்னை மாநகராட்சி சார்பில், 200 இடங்களில் அம்மா உணவகங்கள் செயல்படுகின்றன. ஆரம்பத்தில் நாள் ஒன்றுக்கு ரூ.30 முதல் ரூ.40 ஆயிரம் வரை கிடைத்த வருவாய், தற்போது புதிய மெனுவால் ரூ.9 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை அதிகரித்துள்ளது.

அமோக ஆதரவு...
குறைந்த விலையில் தரமான உணவு தரப்படுவதால், அம்மா உணவக வாடிக்கையாளர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சராசரியாக தினமும் 50 ஆயிரம் பேர் சாப்பிடுவதாக கணக்கெடுப்பு சொல்கிறது..

இட்லியை சாப்பிட்ட பொங்கல்....
முன்பெல்லாம் தினமும் 3 லட்சம் விற்பனையாகி வந்த இட்லி விற்பனை, பொங்கலின் வருகையால் தடாலடியாக 2.5 லட்சமாக குறைந்துள்ளதாம். தற்போது நாளொன்றுக்கு சராசரியாக 35 ஆயிரம் பொங்கல் விற்பனை ஆகிறதாம்.

ஒரு லட்சம் சாதம் விற்பனை...
நாளொன்றுக்கு சுமார் ஒரு லட்சம் சாத வகைகள் விற்பனையாகிறதாம். அதில், தயிர் சாதம் 20 ஆயிரமும், சாம்பார் சாதம் 40 ஆயிரமும், கறிவேப்பிலை சாதம் 18 ஆயிரம்.

சிறு கடைகளுக்கு பாதிப்பு...
முதல் கட்டமாக இட்லி மட்டும் விற்பனை செய்யப்பட்டதை விட தற்போது பொங்கலும் சேர்ந்த பிறகு சிறு கடைகள், தள்ளு வண்டி கடைகளில் வியாபாரம் செய்பவர்களின் நிலை'அந்தோ பரிதாபம்' ஆனது என்னவோ உண்மைதான்.

3 மடங்கு குறைவு...
ரூ 15 முதல் ரூ20 வரை சிறு ஓட்டல்களில் பொங்கல் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் அம்மா உணவகங்களிலோ பொங்கல் வெறும் ரூ.5 தான்.

சப்பாத்தி வந்தால்...
சப்பாத்தி அறிமுகம் படுத்தப்பட்டால் பாதிப்பு இன்னும் அதிகமாகும் என அச்சம் நிலவுகிறது சிறு வியாபாரிகள் மத்தியில்.

விரிவு படுத்துதல்...
அம்மா உணவகம் தனது கிளைகளை விரித்து வருகிறது.விரைவில், 4 அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளிலும், பொதுமக்கள் கூடும் இடங்களிலும் தொடங்கப்பட இருக்கிறது என்பது குரிப்பிடத்தக்கது..
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications