இறக்குமதி வரி மேலும் உயர்வு: தங்கம், பிளாட்டினம் விலை அதிகரிக்கும் அபாயம்
Subscribe to Oneindia Tamil

இது குறித்து கருத்து தெரிவித்த மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், 'வெளிநாடுகளில் இருந்து தங்கத்தை அதிக அளவில் இறக்குமதி செய்தால், நாட்டின் நிதி பற்றாக்குறை உயர வாய்ப்பு உள்ளது. எனவே, இறக்குமதியை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்கும். அதேசமயம் தங்கத்தின் மீதான மோகத்தை மக்கள் குறைத்துக்கொள்வதுதான் இறக்குமதியை குறைக்க ஒரே வழி' என கூறியுள்ளார்.
கடந்த ஜனவரியில், தங்கத்தின் இறக்குமதி வரியை 4 லிருந்து 6 சதவீதமாக உயர்த்தியது மத்திய அரசு. இதனால், தங்கம் விலை கூடியது. அப்போது கருத்து தெரிவித்த சிதம்பரம், ‘மேலும் வரியை உயர்த்தினால் கடத்தல் அதிகரிக்கும் அபாயம் இருக்கிறது' எனத் தெரிவித்திருந்தார்.
ஆனால், தற்போது தங்கம் மீதான இறக்குமதி வரி 6 லிருந்து 8 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளதால், பற்றாக்குறை கடுமையாக உயர்ந்து, தங்கம் விலை உயர வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications