மத்திய திட்டக்குழு துணை தலைவர் அலுவாலியாவை சந்தித்து பேசிய ஜெயலலிதா
சென்னை: மத்திய திட்டக்குழு கூட்டத்தில் கலந்து கொள்ள முதல்வர் ஜெயலலிதா இன்று காலை தனி விமானம் மூலம் டெல்லி சென்றார். அங்கு அவர் திட்டக்குழு துணை தலைவர் அலுவாலியாவை சந்தித்து பேசினார்.
2013-14ம் ஆண்டுக்கான திட்ட ஒதுக்கீடுகள் குறித்த பேச்சுவார்த்தை இன்று டெல்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாநில முதல்வர்கள் கலந்து கொண்டு தங்கள் மாநிலங்களுக்கு தேவையான நிதியை ஒதுக்குமாறு வலியுறுத்தினார்கள். இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக முதல்வர் ஜெயலலிதா இன்று காலை தனி விமானம் மூலம் டெல்லிக்கு கிளம்பினார். அவர் இன்று திட்டக் குழு துணை தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியாவை சந்தித்து பேசினார்.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
மத்திய திட்டக்குழு கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக முதல்-அமைச்சர் ஜெயலலிதா இன்று (திங்கட்கிழமை) காலை சென்னையில் இருந்து டெல்லி செல்கிறார். அங்கு மத்திய திட்டக் குழு துணைத் தலைவர் மாண்டேக்சிங் அலுவாலியாவைச் சந்தித்து, 2013-2014-ம் ஆண்டு தமிழகத்திற்கான நிதி ஒதுக்கீடு குறித்து ஆலோசனை நடத்துகிறார். பின்னர் மாலையிலே முதல்-அமைச்சர் ஜெயலலிதா சென்னை திரும்புகிறார் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை தனி விமானம் மூலம் டெல்லி கிளம்பிய ஜெயலலிதா பிற்பகல் 3.15 மணிக்கு நடந்த மத்திய திட்டக்குழு கூட்டத்தில் கலந்து கொண்டு தமிழகத்திற்கு நிதி அளிக்க வலியுறுத்தினார். அவருடன் நிதி அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், அரசு தலைமை செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன், நிதித்துறை முதன்மைச் செயலாளர் கே.சண்முகம் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இன்று இரவு 7.15 மணிக்கு அவர் சென்னை திரும்புகிறார்.
முன்னதாக அவர் திட்டக் குழு துணை தலைவர் அலுவாலியாவை சந்தித்து பேசினார். பருவமழை பொய்த்து வறட்சி எற்பட்டுள்ளதால் 2013-2014ம் நிதியாண்டில் தமிழகத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்குமாறு அவர் அலுவாலியாவை கேட்டுக் கொண்டார்.












Click it and Unblock the Notifications