மணிப்பூர் மோரேவில் தமிழர் கோவில் நிலத்தையும் உரிமை கோருகிறது மியான்மர் அரசு!
மோரே: மணிப்பூர் மாநிலத்தின் எல்லை நகரான மோரேவில் தமிழர்கள் வழிபாடு நடத்தி வரும் அங்காள பரமேஸ்வரி முனீஸ்வரர் கோயில் கட்டப்பட்டுள்ள நிலத்தையும் தங்களது நிலப்பரப்பு என மியான்மர் அரசு உரிமை கோரி இருப்பது சர்ச்சையை உருவாக்கி உள்ளது.
மோரே நகரம் பர்மா எல்லையில் அமைந்துள்ளது. இங்கு பல்லாயிரம் தமிழர்களும் வாழ்ந்து வருகின்றனர். இங்கு தமிழர்கள் மட்டுமின்றி மணிப்பூர் மாநிலத்தவரும் சாதி, மதம், இனம் கடந்து வழிபாடு நடத்தி வரும் ஆலயம் அங்காள பரமேஸ்வரி முனீஸ்வரர் ஆலயம். ஆண்டுதோறும் இக்கோவிலில் நடைபெறும் தீ மிதி திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது.

இந்த கோயிலை ஒட்டி ஒரு மண் சாலை செல்கிறது. இந்த மண் சாலையின் மறுமுனைதான் பர்மா. ஆனால் அந்த பகுதியிலும் கூட தமிழர்கள் கட்டிய கோயில் கேட்பாரற்றே கிடக்கிறது. அதாவது முன்பு இந்திய எல்லைப் பகுதி விரிந்திருந்தது. அப்போது அங்கு கோயில் கட்டப்பட்டு வழிபாடும் நடத்தப்பட்டிருக்கிறது. மெல்ல மெல்ல மோரே நகரை நெருக்கிக் கொண்டே மியான்மர் ராணுவத்தினர் கோயிலின் ஒரு பகுதியை கபளீகரம் செய்துவிட்டனர்.
இந்நிலையில் இந்தியா-மியான்மர் இணைந்து ஒருங்கிணைந்த சோதனைச் சாவடியை அமைக்கு பணியை மேற்கொண்டு வந்தனர். அதே நேரத்தில் மோரே நகரின் மேலும் தமிழர் கோயில் நிலம் உள்ளிட்ட சில பகுதிகளையும் மியான்மர் அரசு தமக்கு உரித்தானது என உரிமை கோரி உள்ளது. மோரே நகருக்கு நேற்று சென்றிருந்த புதிய உள்துறை செயலர் அனில் கோஸ்வாமி சோதனைச் சாவடி மற்றும் மியான்மர் அரசு உரிமை கோரும் இந்திய பகுதிகளைப் பார்வையிட்டார். தற்போது ஒருங்கிணைந்த சோதனைச் சாவடி அமைக்கும் பணி நிறுத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications