சவூதியில் ‘கும்பலாக’ தற்கொலை செய்யப் போவதாக மிரட்டும் 33 ராஜஸ்தான் தொழிலாளர்கள்
ஜெய்ப்பூர்: போலியான நிறுவனத்தால் ஏமாற்றப்பட்டு சவூதியில் வாடும் 33 ராஜஸ்தான் தொழிலாளர்கள் தக்களை மீட்க அரசு முயற்சி செய்யவில்லை எனில் கும்பலாக தற்கொலை செய்து கொள்ள இருப்பதாக எச்சரித்துள்ளனர்.
ஜெய்ப்பூர் நகரில் கமல் சோனி என்பவர் நடத்தும் டிராவல் நிறுவனத்தின் மூலம், சவுதி அரேபியாவுக்கு வேலைக்கு அனுப்பப் பட்டனர் 33 ராஜஸ்தான் தோழிலாளர்கள். மாதச்சம்பளம் 21,000 என ஆசையில் அவூதி சென்றவ்ர்களுக்கு, அங்கு சென்ற பிறகு தான் தாங்கள் ஏமாற்றப்பட்டது தெரிய வந்தது.
கமல் கூறியது போலி நிறுவனம் என்பது இத்தொழிலாளர்கள் அங்கு சென்றடைந்த பிறகு தான் உறுதியானது. ஏற்கனவே, இந்த வேலைக்காக அவர்கள் தலா ஒரு லட்ச ரூபாயை கமலிடம் கொடுத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
வெவ்வேறு கூலி வேலைகள் செய்து இரண்டு மாதங்களை சவூதியில் ஓட்டிய அவர்கள் தற்போது எந்த வேலையும் இன்றி வாடி வருகின்றனர். சொந்த ஊருக்கு திரும்பவும் அவர்களிடம் பணப் பற்றாக்குறை.
இது குறித்து, ராஜஸ்தான் மாநில முதலமைச்சருக்கு பலமுறை தகவல் அனுப்பியும் அவர்களுக்கு உதவிகள் எதுவும் கிடைக்கப் பெறாததால், தற்போது தாங்கள் கும்பலாக தற்கொலை செய்து கொள்ளப் போவதாக எச்சரிக்கை விடுத்துள்ளனர் அத்தொழிலாளர்கள்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அமெரிக்காவின் நியூயார்க் மாநிலத்தில் உள்ள ராஜஸ்தானிய மக்களின், வட அமெரிக்காவின் ராஜஸ்தான் சங்கம் என்ற அமைப்பிதலைவர் பிரேம் பண்டாரி கூறுகையில், ‘இவர்களுக்காக கடந்த இரண்டு மாதங்களாகத் தாங்கள் முயற்சி செய்து வருகிறோம். இந்த 33 பேரிடமும் அவசர பயண சான்றிதழ் இருக்கும்போதிலும், வேலை மற்றும் தங்குமிடம் குறித்த அனுமதி சான்றிதழ் இல்லாத காரணத்தினால், உள்ளூர் அதிகாரிகள் இவர்களது கைவிரல் ரேகைகளை இன்னும் விமான நிலைய அதிகாரிகளிடம் அளிக்கவில்லை. இவர்களிடமும் பணமில்லாத காரணத்தினால் இவர்களால் உடனடியாக சவுதியை விட்டு வெளியேற முடியவில்லை. சவுதி அரேபியாவில் இயங்கிவரும் ராஜஸ்தான் சர்வதேச அமைப்பும் இணைந்து இந்தத் தொழிலாளிகளுக்கு இருப்பிடம், உணவு போன்ற தேவைகளுக்கு ஏற்பாடு செய்ய முயற்சித்து வருகிறது' எனத் தெரிவித்துள்ளார்.
ஆனால், பசியால், பட்டினியால் இறப்பதை விட தற்கொலை செய்து கொள்வது கௌரவமானது என கருதுவதாக அங்குள்ள தொழிலாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications