உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவத்திற்கு விஜயகாந்த் வாழ்த்து

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது,
தமிழகத்தில் ஈரோடு மாவட்டத்திலுள்ள ஒரு சிறிய கிராமத்தில் விவசாய குடும்பத்தில் பிறந்து, தனது மாணவ பருவத்தில் அரசு பள்ளியில் தமிழ் வழிக் கல்வியை பயின்று, சட்டம் மற்றும் நீதியின் பேர் கொண்ட பற்றால் பள்ளிப் படிப்பிற்கு பிறகு, சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் சட்ட படிப்பை முடித்தவர் மதிப்பிற்குரிய நீதியரசர் பி. சதாசிவம் அவர்கள். சட்டக் கல்வியை முடித்த பிறகு சென்னை உயர் நீதிமன்றத்தில் தன்னை ஒரு வழக்கறிஞராக 1973ம் ஆண்டு பதிவு செய்து கொண்டு, தனது சிறப்பான வழக்கறிஞர் பணியை சென்னை உயர் நீதிமன்றத்திலேயே துவக்கினார்.
அதன் பிறகு உயர் நீதிமன்ற நீதிபதியாகவும் பொறுப்பேற்று, தன்னுடைய கடமையை செவ்வனவே செய்து வந்தார். சிறந்த பண்பாளராகவும், பார்ப்பதற்கு எளிமையாகவும் இருந்த இவர் 2007ம் ஆண்டு உச்ச நீதிமன்ற நீதிபதியாக டெல்லிக்கு சென்றார். அங்கே தொடர்ந்து தனது திறமையான, நேர்மையான பணியால் தற்போது தலைமை நீதிபதியாக உயர்ந்திருக்கிறார்.
உச்ச நீதிமன்ற வரலாற்றில் சுமார் 60 ஆண்டுகளுக்கு பிறகு, தமிழர் ஒருவர் தலைமை நீதிபதியாக பதவியேற்க இருப்பது தமிழகத்திற்கும், உலகெங்கும் வாழுகின்ற தமிழர்களுக்கும் மகிழ்ச்சி அளிப்பதோடு, பெருமைக்குரிய விஷயமும் ஆகும். இன்று உச்ச நீதிமன்றத்தின் 40-வது தலைமை நீதிபதியாக பொறுப்பேற்கவுள்ள நீதிபதி பி.சதாசிவத்தின் பணி சிறக்க, தமிழக மக்கள் சார்பாகவும், எனது சார்பாகவும் உளமார வாழ்த்துகின்றேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
நீதியரசர் சதாசிவம் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இன்று காலை பொறுப்பேற்றுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்!












Click it and Unblock the Notifications