திருத்தணியில் சீமான் கட்சி நிர்வாகி வெட்டிக் கொலை: போலீசார் குவிப்பு
திருவள்ளூர்: திருத்தணியில் நாம் தமிழர் கட்சி நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
திருத்தணி பெரிய தெருவைச் சேர்ந்தவர் பசும்பொன் ராஜா(32). நாம் தமிழர் கட்சி மாவட்ட இணை செயலாளர். அவர் அகூர் பகுதியில் கோணிப்பை தைத்து விற்பனை செய்து வந்தார். அவரது மனைவி சரண்யா. அவர்களின் மகன் மருதப்பாண்டியன்(4). நேற்று மதியம் கடைக்கு சென்ற ராஜா இரவாகியும் வீட்டுக்கு வரவில்லை.
இதனால் கவலை அடைந்த சரண்யா அக்கம் பக்கத்தினரிடம் விவரத்தை தெரிவித்து அவர்கள் உதவியுடன் தனது கணவரை தேடினார். இந்நிலையில் சித்தூர்-திருத்தணி சாலையோரத்தில் வாலிபர் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுக் கிடந்தது நள்ளிரவு 1 மணி அளவில் தெரிய வந்தது. இது குறித்து தகவல் அறிந்த திருத்தணி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலைக் கைப்பிற்றி அதை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணையில் இறந்தது பசும்பொன் ராஜா என்பது தெரிய வந்தது. அவரது உடலை அவரது மனைவி அடையாளம் காட்டினார். ராஜாவின் உடல் கிடந்த இடத்தில் அவரது பைக் மற்றும் செல்போன் கிடந்தது. அவர் கொல்லப்படும் முன்பு யாருடன் பேசியுள்ளார் என்ற தகவலை போலீசார் சேகரித்து வருகின்றனர்.
ராஜா அப்பகுதியைச் சேர்ந்த பலரிடம் கடன் வாங்கி இருந்தார். இந்த கடன் விவகாரத்தால் அவருக்கும் சிலருக்கும் இடையே மோதல் ஏற்பட்டிருந்தது. இந்த விவகாரத்தில் அவர் கொல்லப்பட்டாரா அல்லது கட்சி தகராறா என்பது உள்பட பல்வேறு கோணங்களில் விசாரணை நடந்து வருகிறது. இது தவிர ராஜா வேலை வாங்கித் தருவதாகக் கூறி பலரிடம் பணம் பெற்றுள்ளார் என்றும் தெரிய வந்துள்ளது.
ராஜா கொல்லப்பட்டது குறித்து அறிந்த நாம் தமிழர் கட்சியினர் திருத்தணியில் குவிந்துவிட்டனர். இதனால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் பிரேத பரிசோதனை செய்யப்படவிருக்கின்ற அரசு மருத்துவமனையில் போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications