தெலுங்கானாவுக்கு எதிர்ப்பு- விஜயாம்மா போராட்டம் வாபஸ்! சிறையில் நாளை முதல் ஜெகன் உண்ணாவிரதம்!!
குண்டூர்: தெலுங்கானா தனி மாநிலத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கவுரவ தலைவர் ஒய்.எஸ். விஜயாம்மா மேற்கொண்ட சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டம் கைவிடப்பட்டுள்ளது. அதே நேரத்தில் சிறையில் இருக்கும் விஜயம்மாவின் மகன் ஜெகன் மோகன் ரெட்டி நாளை முதல் சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொள்வார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆந்திராவை பிரித்து தெலுங்கானா தனி மாநிலம் அமைக்கக் கூடாது என்பதற்காக ராயலசீமா, கடலோ ஆந்திரா பகுதிகளில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்தப் பகுதியில் செல்வாக்குமிக்க ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் கவுரவ தலைவர் விஜயாம்மாவும் போராட்டத்தில் குதித்தார். கடந்த 6 நாட்களாக அவர் சாகும்வரை உண்ணாவிரதம் இருந்தார்.

இதைத் தொடர்ந்து இன்று காலை அவர் குண்டூர் மருத்துவமனையில் போலீசாரால் வலுக்கட்டாயமாக அனுமதிக்கப்பட்டார். ஆனால் அவர் அங்கு சிகிச்சையை ஏற்க மறுத்து தொடர்ந்தும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார். இந்த நிலையில் சிறையில் உள்ள ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவரும் விஜய்யாமாவின் மகனுமாகிய ஜெகன் மோகன் ரெட்டி விடுத்த வேண்டுகோளை ஏற்று அவர் தமது உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தெலுங்கானாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஜெகன் மோகன் ரெட்டி நாளை முதல் சிறையில் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொள்ள இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெகன் மோகன் ரெட்டியை சஞ்சலகுடா சிறையில் இன்று சந்தித்த அவரது மனைவி பாரதி ரெட்டி இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை உறுதிப்படுத்தியிருக்கிறார்.
அத்துடன் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய தெலுங்கானா பகுதி தலைவர்களுக்கு தமது விளக்க கடிதம் ஒன்றையும் ஜெகன் மோகன் அனுப்பவும் திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications