கரகாட்டக்காரன் செந்தில் மாதிரியே மூஞ்சி... ஆனா செய்கையெல்லாம் அப்படியே நம்பியார் மாதிரி
பீஜிங்: பால் வடியும் முகம். ஆனால் செய்த சேட்டையோ மகா மோசம். கேங் ரேப் வழக்கில் சிக்கியுள்ள சீன ராணுவத் தளபதியின் 17 வயது மகன் மீதான விசாரணை அங்கு தொடங்கியுள்ளது.
சீன ராணுவத்தில் முக்கியத் தளபதிகளில் ஒருவராக இருக்கும் லி ஸுவான்ஜுவாங்கின் மகன்தான் இந்த லி தியான்யி. 17 வயதாகும் இந்த சிறுவன் கேங் ரேப் சர்ச்சையில் சிக்கி கைதாகியுள்ளான்.
அவன் மீதான விசாரணை சீனாவில் தொடங்கியுள்ளது. ஆனால் தான் இந்தக் குற்றத்தை செய்யவில்லை என்று தியான்யி மறுத்துள்ளான்.
பீஜிங் ஹோட்டலில்
கடந்த பிப்ரவரி மாதம் பீஜிங்கில் உள்ள ஒரு ஹோட்டலில் இந்த சம்பவம் நடந்தது.
குடிபோதையில் கற்பழிப்பு
தியான்யியும், மேலும் நான்கு பேரும் சேர்ந்து ஹோட்டலில் ஒரு பெண்ணை கும்பலாக பலாத்காரம் செய்து விட்டனர்.
அப்பாவுக்கு உடம்பு சரியில்லை
மகனின் செயலால் அதிர்ச்சி அடைந்த ராணுவத் தளபதிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு அவர் சுகவீனமடைந்தார்.
கரகாட்டக்காரன் செந்தில் போல முகம்
பார்ப்பதற்கு அப்படியே கரகாட்டக்காரன் படத்தில் வரும் அப்பாவி முகம் கொண்ட செந்தில் போலவே இருக்கிறார் இந்த தியான்யி.
10 வருஷம் களிதான்...
ஆனால் இவன் மீதான குற்றச்சாட்டு நிரூபணமானால் 10 ஆண்டுகள் சிறைத் தணட்னை கிடைக்கும் என்று கூறுகிறார்கள். அதை விடக் கூடுதலாகவும் கிடைக்கலாமாம்.
ரகசிய விசாரணை
தியான்யி மைனர் என்பதால் பகிரங்க விசாரணை நடத்தப்படவில்லை. மாறாக ரகசிய விசாரணைதான் நடந்து வருகிறது.
2011ம் ஆண்டிலேயே சிறைத் தண்டனை
கடந்த 2011ம் ஆண்டு 15 வயதாக இருந்தபோதே, தியான்யி சர்ச்சையில் சிக்கினார். அப்போது ஒரு தம்பதியை தாக்கியதாக கைது செய்யப்பட்டு ஒரு வருடம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.