அரியலூர் மாணவி வழக்கு.. நீதியின் பக்கம் நின்ற மதுரை உயர்நீதிமன்ற கிளைக்கு நன்றி.. அண்ணாமலை கருத்து
அரியலூர்: அரியலூர் மாணவி தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம் செய்யப்பட்டதை பாஜக தலைவர் அண்ணாமலை வரவேற்றுள்ளார்.
Recommended Video
அரியலூர் மாணவி தற்கொலை விவகாரம் தமிழ்நாட்டில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தேசிய அளவில் இந்த வழக்கு விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
அரியலூரை சேர்ந்த அந்த மாணவி தஞ்சாவூரில் இருக்கும் அரசு உதவி பெறும் பள்ளியில் படித்து வந்தார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் அந்த மாணவி பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

மாணவி மரணம்
மாணவியின் மரணத்திற்கு பள்ளி நிர்வாகம் கொடுத்த மத மாற்ற அழுத்தம்தான் காரணம் என்று பாஜக குற்றஞ்சாட்டியது. மாணவியின் பெற்றோரும் மத மாற்ற அழுத்தம் கொடுக்கப்பட்டதாக புகார் வைத்தார். இந்த நிலையில் மாணவியின் மரணத்திற்கு மத மாற்றம் காரணம் இல்லை, மெஜிஸ்டிரேட் வாக்குமூலத்தில் மத மாற்றம் பற்றி எதுவும் சொல்லவில்லை என்று போலீஸ் தரப்பு வாதம் வைத்தது.

நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதன்
இந்த வழக்கு விசாரணை மதுரை உயர் நீதிமன்ற கிளையில் நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதன் மூலம் நடத்தப்பட்டு வந்தது. கடந்த வெள்ளிக்கிழமை இந்த வழக்கு விசாரணை முடிவிற்கு வந்தது. அரியலூர் மாணவி தற்கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றி மதுரை ஹைகோர்ட் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. மாணவியின் மரணத்தில் சிபிசிஐடி விசாரணை வேண்டும் என்று மாணவியின் பெற்றோர் வழக்கு தொடுத்த நிலையில் மதுரை ஹைகோர்ட் கிளை இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது

அண்ணாமலை
அரியலூர் மாணவி தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம் செய்யப்பட்டதை பாஜக தலைவர் அண்ணாமலை வரவேற்றுள்ளார். இது தொடர்பாக அவர் தெரிவித்துள்ள கருத்தில், அரியலூர் மாணவி வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டுவிட்டது. நீதியின் பக்கம் நின்ற மதுரை உயர்நீதிமன்ற கிளைக்கு நன்றி என்று பாஜக தலைவர் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கில் அண்ணாமலை தொடக்கத்தில் இருந்து சிபிஐ விசாரணைக்கு கோரிக்கை விடுத்து வந்தது குறிப்பிடத்தக்கது.

வானதி சீனிவாசன்
இது தொடர்பாக பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் அளித்த கருத்தில், மாணவியின் தற்கொலை வழக்கை CBIக்கு மாற்றி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிக்கான போராட்டத்தில் உடன் நின்ற அனைவருக்கும் நன்றி. மாணவியின் மரணத்திற்கு நீதி கிடைக்கும் என்று நம்பிக்கை ஏற்பட்டுள்ளது என்று பாஜகவின் வானதி சீனிவாசன் எம்எல்ஏ தெரிவித்துள்ளார்.
-
சிறிய கட்சிகளுக்கு தாமரை சின்னம்.. வாக்கு வங்கியை காக்க பாஜக ஐடியா.. எடப்பாடி காதுக்கு போன மெசேஜ்! -
அண்ணாமலை + நயினார் + வானதி.. தோல்வி பயத்தில் தொகுதி மாற தயாராகும் பாஜக தலைவர்கள்.. இத்தனை பேரா? -
புதுச்சேரியில் மார்ட்டின் மகனால் தெறித்து ஓடும் பாஜக? ரங்கசாமி போட்ட சைலண்ட் ஸ்கெட்ச்.. அப்போ விஜய் -
30 தொகுதிகளின் பட்டியல்.. அதிமுக கோட்டையை கேட்கும் பாஜக.. எடப்பாடி பழனிசாமி டெல்லி செல்வதன் பின்னணி! -
தொகுதிப் பங்கீடு என்னாச்சு? டெல்லிக்கு பறந்த எடப்பாடி பழனிசாமி.. நயினார் சொன்ன மேட்டர்! -
2 தொகுதிகளில் வேட்பு மனுவை தாக்கல் செய்தார் ரங்கசாமி.. புதுச்சேரி முதல்வரின் 2 சீட் வெற்றி ஃபார்முலா -
"மிஷன் கேரளா.." சத்தமே இல்லாமல் இறங்கிய ஆர்எஸ்எஸ்.. தேர்தலில் காத்திருக்கும் ட்விஸ்ட்! -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி -
வாக்காளர் லிஸ்டில் பெயர் இல்லை! ஆனால் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நடிகை! கேரளாவில் NDA சொதப்பல் -
நாளை டெல்லிக்கு பறக்கும் தினகரன், அன்புமணி? அமித் ஷா முன்னிலையில் NDA கூட்டணி தொகுதிப் பங்கீடு டீல்? -
திருச்செந்தூர் சென்ற புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி.. பேச்சுவார்த்தையில் எஸ்கேப்.. பரிதவிக்கும் பாஜக












Click it and Unblock the Notifications