கர்நாடகாவில் அசத்தல்.. "மாதவிடாய் கப்பிற்கு" மாறிய 8,000 கிராமப் பெண்கள்.. மாபெரும் மாற்றம்
பெங்களூரூ: கர்நாடக மாநிலத்தில் உள்ள கனகபுரா தாலுகாவின் 36 கிராமங்களை சேர்ந்த சுமார் 8,000 பெண்கள் மாதவிடாய் காலங்களில் நாப்கின்களுக்கு பதிலாக தற்போது மாதவிடாய் கப்களை பயன்படுத்த தொடங்கியுள்ளனர். வளர்ந்த பெரு நகரங்களில் வசிப்பவர்களே இது குறித்த போதிய விழிப்புணர்வு பெறாத நிலையில் 36 கிராமங்களில் உள்ள பெண்கள் இந்த மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளனர். இது குறித்து விரிவாக அலசுகிறது இந்த செய்தி தொகுப்பு.
மாதவிடாய் காலம் பெண்களுக்கு எப்போதும் தலைவலி நிறைந்த காலமாகும். தொடக்கக் காலத்தில் மாதவிடாய் நாட்களில் பெண்கள் தனியாக இருக்க வைக்கப்பட்டனர். அப்போது நாப்கின் போன்ற வசதிகள் கிடையாது. கிழிந்த துணிகளை கொண்டு தங்களை பெண்கள் தூய்மைப்படுத்தி வந்தனர். பின்னர் நாப்கின்கள் அவர்களுக்கு பேருதவியாக இருந்தது. ஆனால் நாளடைவில் இந்த நாப்கின்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கின. அதாவது, நாப்கின்கள் முறையாக அப்புறப்படுத்தப்படாமல் சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தியது.

மாதவிடாய்
இவற்றை தவிர்க்க தற்போது 'மாதவிடாய் கப்' பயன்படுத்தப்படுகிறது. ஆனால் இது குறித்த போதிய விழிப்புணர்வு இல்லாத காரணத்தால் இதை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்தே காணப்படுகிறது. இந்நிலையில் பெலகு அறக்கட்டளையின் ஆதரவுடன் 'ஆசான்' எனும் நிறுவனம் ஒரு முயற்சியை முன்னெடுத்தது. ஆசான் மாதவிடாய் கப்களை தயாரிக்கும் நிறுவனமாகும். இது, கர்நாடகாவின் கனகபுரா தாலுகாவில் உள்ள பெண்களை நாப்கின்களுக்கு பதில் இந்த 'மாதவிடாய் கப்பை' பயன்படுத்த ஊக்குவித்தது.

கப்
பொதுவாக நாப்கின்களில் ஈரப்பதத்தை உறிஞ்ச கெமிக்கல் ஜெல் பயன்படுத்தப்படுகிறது. அதேபோல, துர்நாற்றத்தை தவிர்க்க வாசனை திரவியங்களும் பயன்படுத்தப்படுகின்றன. இவை மக்கும் தன்மை கொண்டிருப்பதில்லை. எனவே இது பாதுகாப்பாக வெளியேற்றப்படாதபோது பெருகி வரும் மாசுபாட்டிற்கு மேலும் துணைபோகும் வண்ணம் அமைந்துவிடுகிறது. மட்டுமல்லாது ஒவ்வொரு முறையும் இது அதிக விலைகொடுத்து வாங்கப்படுவதால் குறைந்த விலையில் கிடைக்கும் தரமற்ற நாப்கின்களையே கிராமங்களில் உள்ள பெண்கள் பயன்படுத்தி வருவதாக புள்ளிவிவரங்களும் கூறுகின்றன.

நாப்கின்
ஆனால் இந்த மாதவிடாய் கப், பயன்படுத்த எளிமையானதாகும். மீண்டும் இதை சுத்தப்படுத்தி பயன்படுத்த முடியும் என்பதால் பெரிய அளவு செலவு மிச்சப்படுத்தப்படும். இதனை பெண்கள் பயன்படுத்துவதை ஊக்குவிக்கவே ஆசான் முயன்றது. இதன் பலனாக கனகபுரா தாலுகாவில் உள்ள 36 கிராமங்களின் சுமார் 8,000 பெண்கள் இந்த மாதவிடாய் கப் பயன்பாட்டை ஏற்றுக்கொண்டுள்ளனர். இது சூழலியல் மாறுபாட்டில் ஒரு பெரிய முன்னெடுப்பு என சமூக ஆர்வலர்கள் குறிப்பிடுகின்றனர். ஆனால் இந்த பணியை மேற்கொள்ள எடுத்த முயற்சிகள் அவ்வளவு எளிதானதல்ல என ஆசான் நிறுவனர் ஈரா குஹா கூறியுள்ளார்.

சுகாதாரம்
கிராமத்தினர் இந்த மாதவிடாய் சுகாதாரம் குறித்து மிகவும் பழைய நடைமுறைகளை பின்பற்றி வந்திருந்ததாகவும், அது அவர்களுக்கு முழுமையான சுகாதார பாதுகாப்பை வழங்காது என்பதை தெரிந்தும் அதிலிருந்து அவர்கள் வெளியே வந்திருக்கவில்லை என்றும் ஈரா ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். கிராம பெண்கள் பழைய கந்தல் துணிகளையே சமீப நாட்களுக்கு முன்னர் வரை பயன்படுத்தி வந்ததாக கூறும் ஈரா, அப்பெண்கள் இவ்வாறு பயன்படுத்தி துணிகளை யாருக்கும் தெரியாமல் நள்ளிரவில் எரியூட்டும் நடைமுறையை கொண்டிருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

பெலகு அறக்கட்டளை
எனவே ஆசான் மேற்கொண்ட தொடர் விழிப்புணர்வின் காரணமாக பெண்கள் விரைவில் இந்த மாதவிடாய் கப் பயன்பாட்டிற்கு மாறினார்கள் என்றும் ஈரா பேட்டியில் கூறியுள்ளார். அதேபோல பெலகு அறக்கட்டளையின் திட்ட மேலாளர் ஜோதி தெரஸ்ராஜ் இந்த முயற்சி வெற்றியடைய முக்கிய பங்காற்றியுள்ளதையும் ஈரா நினைவுகூர்ந்தார்.
இந்தியா போன்ற நீண்ட நெடிய பாரம்பரியமிக்க நாடுகளில் மாதவிடாய் நிகழ்வை ஒரு புறம் தீட்டாகவும், மறுபுறம் அசாமின் காமாக்யா கோயிலில் தெய்வத்தை சிறப்பிப்பதைப் போல கொண்டாடப்படுவதையும் காணமுடிகிறது. ஆனால் இது உடலின் ஒரு சாதாரண இயக்கம்தான். இதனை தீட்டாகவோ, கொண்டாடப்படுவதைக் காட்டிலும் அதை புரிந்துகொள்வதுதான் மனித இனத்தை மேலும் முன்னோக்கி நகர்த்த உதவும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
-
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
சிறகடிக்க ஆசை: விஜயாவின் மாற்றம்! முத்து, மீனாவை பெருமையாக பேசுறாங்களே! குடும்பத்தில் கொண்டாட்டம் -
ரஷ்யா மாஸ்டர் பிளான்: இந்தியாவுக்கு ஜாக்பாட்.. சீனா உதவி.. ஒன்று கூடிய BRICS நாடுகளால் டிரம்ப் ஷாக்! -
மொத்தமாக மாறிய டிரம்ப்.. ஈரான் விஷயத்தில் தொனியை மாற்றிய அமெரிக்க அதிபர்.. அடேங்கப்பா! -
2 வெர்ஷன்.. ஜனநாயகன் படம் இணையத்தில் லீக்கானது எப்படி? அதிகம் பலன் அடைவது யார்? அந்த மர்ம கை -
23000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த பின்பும்.. டிசிஎஸ் நிறுவனத்தில் கட்டுப்படுத்த முடியாத செலவு! -
லீக் ஆன ஜனநாயகன்.. நானே ரீலிஸ் பண்ணித்தரேன்னு சொன்னேனே விஜய்.. விட்டு விளாசிய சாட்டை! -
செந்தில் பாலாஜி பெயரை சொல்லும்போது ‘டங் ஸ்லிப்’.. கோவை தெற்கில் உளறிய பியூஷ் கோயல் -
மும்பை ரெஸ்டாரண்டில் நடந்த சந்திப்பு.. சமாதானமான ஸ்மிருதி மந்தனா குடும்பம்.. மீண்டும் திருமணம்? -
ஜனநாயகன் ரூ.500 கோடி பட்ஜெட் படம்! HD பிரிண்ட்டில் வெளியானது எப்படி? தமிழக டிஜிபியிடம் புகார் -
நம்பர் 5.. அடித்து சொல்லும் சர்வேக்கள்! திமுக+ 180 இடங்களை தாண்டுகிறது! அதிமுக ஓவர்? முக்கிய கணிப்பு












Click it and Unblock the Notifications