பஜ்ரங்தள் தொண்டர் கொலை.. 3 பேரை கைது செய்த போலீஸ்.. கர்நாடகாவில் தணியுமா பதற்றம்?
பெங்களூர்: பஜ்ரங்தள் அமைப்பின் நிர்வாகி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் இதுவரை 3 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.
கர்நாடகாவின் ஷிமோகா நகரில் பஜ்ரங் தள் எனும் இந்துத்துவா அமைப்பின் நிர்வாகி ஹர்ஷா (வயது 23) மர்ம நபர்களால் நேற்று வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.
இதனைக் கண்டித்து ஷிமோகாவில் வன்முறை வெடித்தது. அப்பகுதியில் பல வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. கடைகள் மீது கல்லெறி தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இதனால் ஷிமோகாவில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பதற்றம்
கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் சிவகுமார் ஹிஜாப் தொடர்பாக சில கருத்துகளை தெரிவித்தார். அவரது கருத்துகள்தான் முஸ்லிம் குண்டர்களை தூண்டிவிட்டது என கர்நாடக அமைச்சர் ஈஸ்வரப்பா தெரிவித்தார். இந்த கருத்தும் இப்போது சர்ச்சையாகி உள்ளது. அதேநேரத்தில் கர்நாடகா உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திரா கூறுகையில், ஹிஜாப் விவகாரத்துக்கும் பஜ்ரங் தள் நிர்வாகி படுகொலைக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று அமைச்சர் தெரிவித்தார்.

அமைச்சர் ஞானேந்திரா
பஜ்ரங்தள செயற்பாட்டாளர் ஹர்ஷா கொலை வழக்கு குறித்து பேசிய கர்நாடக உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திரா, இந்த வழக்கில் இதுவரை 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் 5 பேர் குற்றம் சாட்டப்பட்டிருப்பதாக நம்பப்படுவதாகவும் ஆனால் அவர்களுக்குப் பின்னால் யார் இருக்கிறார்கள் என்பது இன்னும் தெரியவில்லை என்றும் ஞானேந்திரா கூறினார்.

வன்முறை
பஜ்ரங் தள் செயற்பாட்டாளர் ஹர்ஷாவின் கொலையைக் கருத்தில் கொண்டு வன்முறை வெடித்தது. அரக ஞானேந்திரா மேலும் கூறுகையில் "ஷிமோகா நகர் முழுவதும் வன்முறை வெடித்துள்ளது. நிலைமையை ஆய்வு செய்து சட்டம் ஒழுங்கை பராமரிக்க காவல்துறை அதிகாரிகளுக்கு நாங்கள் அறிவுறுத்தியுள்ளோம்; 2-3 நாட்களில் இதற்கு தீர்வு காணப்படும்'' என்றும் தெரிவித்தார்.

கண்டிப்பு
பஜ்ரங்தள் செயற்பாட்டாளர் ஹர்ஷாவின் கொலை குறித்து பாஜக எம்.பி பிரதாப் சிம்ஹா கூறுகையில் "இன்று ஹர்ஷா கொலை செய்யப்பட்டுள்ளார். அரசாங்கம் கண்டிப்புடன் செயல்படும் என்று கூறுகிறது, நமது காரியகர்த்தாக்கள் அவர்களை நம்புவார்களா.. நான் வெட்கப்படுகிறேன். நீங்கள் எப்போது கண்டிப்புடன் செயல்படுவீர்கள். அரசு கண்டிப்புடன் செயல்பட்டிருந்தால் இன்று இப்படி நடந்திருக்குமா, இன்றும் காங்கிரசையும், SDPI யையும் குறை கூறாதீர்கள்.

விசாரணை
நமது தொண்டர்கள் ஏன் உழைத்து எங்களுக்கு ஆட்சியைக் கொடுத்தார்கள். கொலையாவதற்காகவா'' என்று கேள்வி எழுப்பியுள்ளார். பஜ்ரங்தள் செயல்பாட்டாளர் ஹர்ஷா மரணம் தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்த வேண்டும் என்று கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மைக்கு மத்திய அமைச்சர் ஷோபா கரந்த்லாஜே கடிதம் எழுதியுள்ளார்.
-
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
அதிமுக முன்னாள் அமைச்சர்களின் உருவபொம்மைகளுக்கு செருப்பு மாலை! பொள்ளாச்சியில் பரபரப்பு -
திரிஷா பற்றிய மொத்த பிரச்சனைகளுக்கும் ஒரே போஸ்டில் அவரே பதில்.. இப்படி ஒரு ரியாக்ஷனை எதிர்பார்க்கலையே












Click it and Unblock the Notifications