பெங்களூரில் அதிகாலையில் பகீர்.. 4 ஐடி ஊழியர்கள் கடத்தல்.! ரூ.19 லட்சம் கேட்டு வந்த போன் கால்!
பெங்களூர்: கர்நாடக தலைநகர் பெங்களூரில் பிரபல நிறுவனத்தில் வேலை செய்த 4 பேர் ஒரே நேரத்தில் கடத்தப்பட்டனர். அவர்களைக் கடத்திய கடத்தல்காரர்கள், சுமார் ரூ.19 லட்சம் பணம் கொடுத்தால் மட்டுமே விடுவிப்போம் என மிரட்டியுள்ளனர். இந்தச் சம்பவம் பெங்களூரில் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
நமது அண்டை மாநிலமான கர்நாடக தலைநகரான பெங்களூர், நாட்டின் ஐடி தலைநகரமாக அறியப்படுகிறது. பல முக்கிய ஐடி நிறுவனங்களும் பெங்களூரில் இருக்கும் சூழலில், நாடு முழுக்க இருந்து இளைஞர்கள் அங்கு வேலைக்காக வருகிறார்கள். இப்படிப் பல தரப்பட்ட மக்கள் இருப்பதால் அங்குப் பல வினோத சம்பவங்களும் நடக்கும். சில அதிர்ச்சி குற்றங்களும் நடக்கும். அப்படியொரு அதிர்ச்சி சம்பவம் தான் கர்நாடக தலைநகர் பெங்களூரில் நடந்துள்ளது.

இரவோடு இரவாகக் கடத்தல்
பெங்களூரில் உள்ள கோரமங்களா பகுதியில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்யும் நான்கு உயர் அதிகாரிகள் சனிக்கிழமை காலை கடத்தப்பட்டனர். இந்தச் சம்பவம் அங்கு பெரும் பரபரப்பைக் கிளப்பியது. இது தொடர்பாகத் தகவல் கிடைத்தவுடன் துரிதமாகச் செயல்பட்ட போலீசார், இந்த சம்பவத்தில் தொடர்புடைய எட்டு பேரைக் கைது செய்தனர். மேலும், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட ஒரு டொயோட்டா இன்னோவா மற்றும் மாருதி சுசுகி வேகன் ஆர் கார்களையும் பறிமுதல் செய்தனர்.
மிரட்டல்
பெங்களூரில் உள்ள பிரபல பிபிஓ நிறுவனத்தில் தான் கடத்தப்பட்ட இந்த நான்கு ஊழியர்களும் பணிபுரிந்து வந்தனர். சனிக்கிழமை 1.30am அளவில் கடத்தியுள்ளனர். அவர்கள் 4 பேருமே அங்கு மேனேஜர் லெவலில் இருப்பவர்கள். தங்களை அரசு அதிகாரிகள் போலக் காட்டி கொண்ட கடத்தல்காரர்கள், விசாரணை என்ற போர்வையில் 4 பேரையும் கடத்தியுள்ளனர்.
இது தொடர்பாகத் தென்கிழக்கு பெங்களூர் துணை காவல் ஆணையர் சாரா ஃபாத்திமா கூறுகையில், "அவர்கள் வேலை செய்து வந்த அலுவலகத்திற்கு அருகிலேயே கடத்தல்காரர்கள் காத்திருந்தனர். 4 பேரையும் கீழே வரவழைத்து, அவர்களைக் கடத்திச் சென்றுள்ளனர்" என்று கூறினார்.
போலீசாருக்கு தகவல்
1.3am அளவில் இந்த கடத்தல் சம்பவம் நடந்துள்ளது. தொடர்ந்து 4 மணியளவில் கடத்தப்பட்ட ஊழியர்களின் குடும்பத்தினரைத் தொடர்பு கொண்ட கடத்தல்காரர்கள், சில வங்கிக் கணக்குகளைக் கொடுத்து.. அந்த கணக்கிற்குப் பணத்தை மாற்றும்படி கூறியிருக்கிறார்.. பாதி தொகையை இப்படி வங்கிக் கணக்கிற்கும், மீதி தொகையை ரொக்கமாகத் தர வேண்டும் எனச் சொல்லியும் மிரட்டியுள்ளனர். இதனால் பதறிய உறவினர்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
தூக்கிய போலீஸ்
சாரா ஃபாத்திமா மேலும் கூறுகையில், "இது தொடர்பாக அதிகாலையில் உதவி மையத்திற்குக் கால் வந்தது. உடனடியாக இந்தச் சம்பவம் குறித்து விசாரிக்கச் சிறப்புக் குழுக்களை அமைத்தோம். கடத்தல்காரர்களைக் கண்டுபிடித்து, அவர்களைக் கைது செய்தோம். மேலும், கடத்தல் சம்பவத்திற்குப் பயன்படுத்தப்பட்ட இரண்டு கார்களையும் பறிமுதல் செய்தோம்" என்று டிசிபி கூறினார். கைது செய்யப்பட்டவர்கள் கோலார் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் சிறு சிறு வேலைகளைச் செய்து வந்தவர்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், விசாரணையைத் தொடர்ந்து நடத்தி வருகிறார்கள். அவர்கள் எதற்காகக் கடத்தலில் ஈடுபட்டனர்.. அவர்களுக்கு பின்னால் வேறு யாராவது இருக்கிறார்களா என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகிறார்கள். இந்தச் சம்பவம் பெங்களூரில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.
-
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு?












Click it and Unblock the Notifications