கிருஷ்ணா நதி படுகையில் கச்சா எண்ணெய்.. விரைவில் 45 ஆயிரம் பேரல்கள் உற்பத்தி.. மத்திய அமைச்சர்
பெங்களூர்: கிருஷ்ணா, கோதாவரி ஆற்று படுகையில் இருந்து முதல் முறையாக நேற்று கச்சா எண்ணெய் வெட்டி எடுக்கப்பட்டுள்ளது என்று மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி கூறியுள்ளார். மேலும் இதன் மூலம் விரைவில் தினமும் 45 ஆயிரம் பேரல்கள் வரை கச்சா எண்ணெய் உற்பத்தி செய்ய முடியும் என்று நம்பிக்கை உள்ளது என்றும் தெரிவித்தார்.
இந்தியா தனது எரிபொருள் தேவையை பூர்த்தி செய்ய பெரிதும் இறக்குமதியைத்தான் நம்பியிருக்கிறது. அதாவது, இந்தியா தனது ஆற்றல் தேவைகளில் 85% இறக்குமதி வாயிலாகவே பூர்த்தி செய்கிறது. இறக்குமதி அதிகமாகச் சார்ந்திருப்பதைக் குறைக்க, உள்நாட்டில் எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க இந்தியா முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான ஒஎன்.ஜி.சி இந்தியாவில் கச்சா எண்ணெய் உற்பத்தியை மேற்கொண்டு வருகிறது. தனியார் துறையை சேர்ந்த நிறுவனங்களும் கச்சா எண்ணெய் உற்பத்தியில் ஈடுபட்டு வருகிறது. எனினும், இந்தியாவின் எரிபொருள் தேவைக்கு இங்கு தயாரிக்கப்படும் எண்ணெய் உற்பத்தியின் அளவு மிக மிக குறைவே ஆகும்.
இதனால், கச்சா எண்ணெய் உற்பத்தி செய்ய எண்ணெய் வயல்கள் குறித்த ஆய்வுகளை இந்திய பெட்ரோலியத்துறை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் தான் ஆந்திர மாநிலம் காக்கிநாடா கடலோர பகுதிகளில் கிருஷ்ணா- கோதாவரி நதியை ஒட்டிய 30 கி.லோ மீட்டர் ஆற்றுப்படுகைகளில் கச்சா எண்ணெய் உற்பத்தியை தொடங்கியிருப்பதாக மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கர்நாடகாவில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ஹர்தீப் சிங் பூரி கூறியதவாது:- காக்கிநாடா கடற்கரையை ஒட்டியுள்ள கிருஷ்ணா கோதாவரி ஆற்று படுகையில் இருந்து முதல் முறையாக நேற்று கச்சா எண்ணெய் வெட்டி எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் 2016-17 ஆண்டில் தொடங்கப்பட்டது. ஆனால், கொரோனா காரணமாக கொஞ்சம் தாமதம் ஏற்பட்டது.
ஆனால், அங்குள்ள 24 எண்ணெய் கிணறுகளில் 4 செயல்பட்டு வருகிறது. நம்மிடம் எரிவாயு மட்டும் அல்ல.. விரைவில் அதாவது மே, ஜூன் மாதத்திற்குள் தினமும் 45 ஆயிரம் பேரல்கள் வரை கச்சா எண்ணெய் உற்பத்தி செய்ய முடியும் என்று நம்பிக்கை உள்ளது. இது நமது மொத்த கச்சா எண்ணெய் உற்பத்தியில் 7 சதவிகிதம் ஆகும். மேலும் நமது கேஸ் உற்பத்தியில் 7 சதவிகிதம் ஆகும். என்று கூறியுள்ளார்.
-
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக்












Click it and Unblock the Notifications