Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மேகதாது அணை விவகார நிலைப்பாடு என்ன?.. கர்நாடகா புதிய முதல்வர் பசுவராஜ் பொம்மை பரபரப்பு பேட்டி!

Subscribe to Oneindia Tamil

பெங்களூரு: கடந்த சில வாரங்களாக கர்நாடக அரசியலில் பரபரப்பான சூழ்நிலை நிலவியதால் மேகதாது அணை விவகாரம் சற்று தணிந்து இருந்தது. கர்நாடகாவில் புதிய முதல்வராக பசுவராஜ் பொம்மை பதவியேற்றுள்ளார்.

Recommended Video

    Who Is Basavaraj Bommai | Karnataka new CM

    தமிழ்நாடு-கர்நாடகா இடையே மேகதாது அணை விவகாரம் பற்றி எரிய கர்நாடகா முன்னாள் முதல்வர் எடியூரப்பா மூல காரணமாக இருந்தார்.

    ''பெங்களுரு குடிநீர் பிரச்சினையை தீர்த்து வைப்பதற்காக மத்திய அரசு அனுமதி அளித்தவுடன் மேகதாது அணை திட்டத்தை தொடங்குவோம்'' என்று எடியூரப்பா சர்ச்சை பேட்டி அளித்து பிரச்சினையை தொடங்கி வைத்தார்.

    விவசாயிகள் அதிர்ச்சி

    விவசாயிகள் அதிர்ச்சி

    ஒப்பந்த விதிகளின்படி காவிரியில் இருந்து தமிழ்நாடு தண்ணீர் பெற்று வருகிறது. இந்த காவிரி நீர்தான் டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு உயிர்நாடியாக இருக்கிறது. ஏற்கனவே உச்சநீதிமன்றத்தில் மேகதாது அணை தொடர்பாக வழக்கு உள்ளதால், கர்நாடக அரசின் பிடிவாதத்திற்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. மேலும் காவிரி நீரையே நம்பி இருக்கும் டெல்டா மாவட்ட விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

    ஓரணியில் கட்சிகள்

    ஓரணியில் கட்சிகள்

    ''மேகதாது அணை கட்டக்கூடாது. இது நல்லுறவுக்கு உகந்த சூழ்நிலை அல்ல'' என்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், எடியூரப்பாவுக்கு அதிரடி பதில் கொடுத்தார். காவிரி மேலாண்மை வாரியத்திலும் தமிழ்நாடு தங்களது கடுமையான எதிர்ப்பை பதிவு செய்து இருந்தது. மேலும், மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தமிழ்நாட்டில் ஆளும் கட்சி, எதிர்க்க்கட்சி என அனைத்து கட்சிகளும் ஓன்று சேர்ந்தன.

    பிரதமருக்கு கடிதம்

    பிரதமருக்கு கடிதம்

    தமிழ்நாட்டில் அனைத்து கட்சிகளும் ஓன்று சேர்ந்து மேகதாது அணை கட்ட முடிவெடுத்து இருக்கும் கர்நாடகா அரசுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியது. பின்னர் இந்த தீர்மான நகலை கட்சிகளின் பிரதிநிதிகள் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் மத்திய நீர்வளத்துறை அமைச்சரிடம் ஒப்படைத்தனர். மேகதாது அணை திட்டத்துக்கு அனுமதி அளிக்க கூடாது என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலினும் கடிதம் எழுதினார்.

    பசுவராஜ் பொம்மை கூறுவது என்ன?

    பசுவராஜ் பொம்மை கூறுவது என்ன?

    இந்த நிலையில் மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடகாவின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என்று கர்நாடகா புதிய முதல்வர் பசுவராஜ் பொம்மை கூறியுள்ளார். புதிய முதல்வராக பொறுப்பேற்ற பிறகு செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்த அவர், '' பிரதமர் நரேந்திர மோடியிடம் அனுமதி பெற்று மேகதாதுவில் அணை கட்டும் பணிகள் தொடங்கும். இதில் எந்த மாற்றமும் இல்லை. காவிரி உபநீரை பயன்படுத்துவதில் எங்களுக்கு முழு உரிமையும் இருக்கிறது. இதனை யாரும் தடுக்க முடியாது'' என்று பசுவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+