மங்களூர் குக்கர் குண்டுவெடிப்பு.. காங்கிரஸ் அலுவலகத்தில் அமலாக்கத் துறை ரெய்டு - 'பரபர' பின்னணி
பெங்களூர்: மங்களூர் குக்கர் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக காங்கிரஸ் அலுவலகம் அமைந்திருக்கும் கட்டிடத்தில் அமலாக்கத் துறையினர் இன்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
கர்நாடகாவில் 5 இடங்களில் நடந்த இந்த சோதனையில் இந்த வழக்கு தொடர்பான பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக அமலாக்கத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான ஷாரிக், தீவிரவாத தாக்குதல்களை அரங்கேற்ற யார் - யாரிடம் பணத்தை கைமாற்றியுள்ளான் என்பதை கண்டறிய சோதனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

நாட்டை உலுக்கிய குண்டுவெடிப்பு
கர்நாடகா மாநிலம் மங்களூருவில் கடந்த நவம்பர் மாதம் 19-ம் தேதி ஆட்டோ ஒன்றில் குக்கர் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த குண்டுவெடிப்புக்கு காரணமான முகமது ஷாரிக் (27) தற்போது என்ஐஏ காவலில் உள்ளார். இதனிடையே, அவரது செல்போனை என்ஐஏ அதிகாரிகள் ஆராய்ந்த போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. முகமது ஷாரிக் தனது உண்மையான பெயரை மறைத்து வேறு பெயருடன் கோவை, மதுரை, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட இடங்களை சுற்றி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர் அந்த இடங்களில் நாசவேலையில் ஈடுபட சதி செய்ததை என்ஐஏ போலீஸார் கண்டுபிடித்தனர்.

ஷாரிக் உருவாக்கிய 'ல்லீப்பர் செல்கள்'
மேலும், செல்போனில் ஆபாசப் படங்களை அனுப்பி சில இளைஞர்களை இழுத்து பின்னர் அவர்களை ஸ்லீப்பர் செல்களாக முகமது ஷாரிக் மாற்றியிருப்பதும் தெரியவந்தது. மங்களூர் கடலோரப் பகுதிகளில் இதுபோல 40 ஸ்லீப்பர்கள் செல்கள் இருப்பதும் என்ஐஏ போலீஸார் கண்டுபிடித்துள்ளனர். அவர்களுக்கு ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு வழங்கப்படுவதை போல வெடிகுண்டு பயிற்சிகளையும் ஷாரிக் வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அந்த ஸ்லீப்பர் செல்களை கண்டுபிடிக்கும் பணியில் என்ஐஏ அதிகாரிகளும், கர்நாடகா போலீஸாரும் ஈடுபட்டுள்ளனர். இதில் பலர் ரகசியமாக கைது செய்யப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அதிரடி ரெய்டு
இந்த சூழலில், மூளைச்சலவை செய்யப்பட்ட இந்த ஸ்லீப்பர் செல்களுக்கு லட்சக்கணக்கில் சட்டவிரோதமாக ஷாரிக் பணம் அனுப்பியதாகவும், தீவிரவாத நாசவேலைகளில் ஈடுபடுவதற்காக அந்தப் பணம் அனுப்பபட்டதாகவும் என்ஐஏ அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்ததது. இதனை அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு என்ஐஏ தெரிவித்தது. இதன்பேரில், என்ஐஏவால் அடையாளம் காணப்பட்ட கர்நாடகாவில் உள்ள 5 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று அதிரடி சோதனை நடத்தினர்.

காங். அலுவலக கட்டிடத்தில் ரெய்டு
அதன் ஒருபகுதியாக, மங்களூரில் உள்ள கட்டிடத்திலும் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர். அந்தக் கட்டிடத்தில் தான் காங்கிரஸ் கட்சி அலுவலகமும் இயங்கி வருகிறது. இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பான சூழல் காணப்பட்டது. சுமார் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக அங்கு சோதனை நடத்தப்பட்டது. எனினும், அந்தக் கட்டிடத்தில் உள்ள வேறு அலுலகங்களில்தான் இந்த சோதனை நடத்தப்பட்டதாகவும், எந்தக் கட்சி அலுவலகத்திலும் சோதனை நடைபெறவில்லை எனவும் அமலாக்கத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
10 கோடி வீட்டை 100 கோடிக்கு விற்ற நடிகை மீனா.. சென்னையில் நில மதிப்பு ராக்கெட் போல் உயர்ந்த இடங்கள் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்!












Click it and Unblock the Notifications