Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தூக்கி வீசப்பட்ட 18 பாஜக எம்எல்ஏக்கள்.. ஹனி டிராப்பால் களேபரமான கர்நாடகா சட்டசபை.. அதிரடி சஸ்பெண்ட்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கர்நாடகாவில் 48 எம்எல்ஏக்களை குறிவைத்து ஹனி டிராப் முயற்சி நடந்துள்ளதாக அமைச்சர் ராஜண்ணா கூறினார். இதுபற்றி நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று பாஜக எம்எல்ஏக்கள் இன்று சட்டசபையில் சபாநாயகர் யுடி காதரின் இருக்கை அமைந்துள்ள போடியம் மீது ஏறி போராட்டம் நடத்தியதால் 18 பாஜக எம்எல்ஏக்கள் 6 மாதம் வரை அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டதோடு, சபை காவலர்கள் அந்த எம்எல்ஏக்களை குண்டுகட்டாக தூக்கி சபைக்கு வெளியே கொண்டு சென்றனர்.

கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. முதல்வராக சித்தராமையா உள்ளார். துணை முதல்வராக டிகே சிவக்குமார். முதல்வர் சித்தராமையாவின் அமைச்சரவையில் கூட்டுறவுறத்துறை அமைச்சராக கேஎன் ராஜண்ணா பொறுப்பு வகித்து வருகிறார்.

karnataka BJP karnataka assembly

இந்நிலையில் கேஎன் ராஜண்ணா கூறிய தகவல் சர்ச்சையை கிளப்பியது. அதாவது கர்நாடகாவில் ஹனி டிராப் வலையில் தன்னை சிக்க வைக்க முயற்சி நடந்தது. அதேபோல் 48 எம்எல்ஏக்களை குறிவைத்து ஹனிடிராப் மோசடிக்கு முயற்சி நடத்தப்பட்டுள்ளது என்று சட்டசபையில் கூறி அதிர வைத்தார்.

karnataka BJP karnataka assembly

அதாவது ஹனி டிராப் என்றால் பாலியல் குற்றச்சாட்டில் ஒருவரை சிக்க வைப்பதாகும். இன்னும் புரியும்படி கூற வேண்டும் என்றால் பெண்களை பயன்படுத்தி ஒருவரை பாலியல் சர்ச்சையில் சிக்க வைப்பதாகும். அந்த பெண்கள், அரசியல் தலைவர்களுடன் நெருக்கமாக இருக்க வைத்து அதனை வீடியோ, போட்டோவாக எடுத்து மிரட்டும் செயலாகும். கர்நாடகாவில் பல அரசியல் தலைவர்கள் ஹனிடிராப்பில் சிக்கி காணாமல் போய் உள்ளனர்.

இப்படியான சூழலில் தான் கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஎன் ராஜண்ணாவின் இந்த பேச்சு சர்ச்சையை கிளப்பியது. இதையடுத்து தான் ஹனிடிராப் தொடர்பாக நீதி விசாரணை நடத்த வேண்டும். கர்நாடகாவில் முதல்வர் பதவியை தக்க வைக்க காங்கிரஸ் தலைவர்கள் இதனை செய்து இருக்கலாம் என்று பாஜகவினர் இன்று சட்டசபையில் கோஷமிட்டனர்.

ஆனால் முதல்வர் சித்தராமையா மறுப்பு தெரிவித்தார். இதையடுத்து பாஜக எம்எல்ஏக்கள் சபாநாயகர் யுடி காதர் இருக்கையின் போடியம் மீது ஏறி கோஷமிட்டனர். அவர் மீது காகிதத்தை வீசி எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து சபை நடவடிக்கைக்கு குந்தகம் ஏற்படுத்தியதாக கூறி 18 பாஜக எம்எல்ஏக்கள் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

அதன்படி பாஜக எம்எல்ஏக்களான அஸ்வத் நாராயணன், முனிரத்னா, எஸ்ஆர் விஸ்வநாத், தொட்டனகவுடா பட்டீல், பரத் செட்டி, சரணு சலகார், பி சுரேஷ் கவுடா, சன்னபசப்பா , உமாநாத் கோட்டியான் பிசி ஹரீஷ், தீரஜ் முனிராஜு, சைலேந்திரா, பசவராஜ் மத்திமுடா, யஷ்பால் வி சுவர்ணா, எம்ஆர் பட்டீல், ராமமூர்த்தி, சந்துரு லமானி, பிஏ பசவராஜு, என 18 பாஜக எம்எல்ஏக்கள் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அடுத்த 6 மாதம் கர்நாடகா சட்டசபை கூட்டத்தில் பங்கேற்க முடியாது. இதற்கான அறிவிப்பை சபாநாயகர் யுடி காதர் வெளியிட்டார். சஸ்பெண்ட் செய்யப்பட்டதை தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவர் ஆர் அசோக், பாஜக எம்எல்ஏக்கள் அனைவரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதையடுத்து சபை காவலர்களை வைத்து அவர்களை வெளியேற்றும்படி சபாநாயகர் யுடி காதர் உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து சபை காவலர்கள் பாஜக எம்எல்ஏக்களை வெளியேற்ற முயன்றனர். ஆனால் பாஜக எம்எல்ஏக்கள் ஒத்துழைக்கவில்லை. இதையடுத்து வேறு வழியின்றி சபை காவலர்கள் 18 பாஜக எம்எல்ஏக்களையும் குண்டு கட்டாக தூக்கி சென்று சட்டசபையில் இருந்து வெளியேற்றினர். இதுதொடர்பான வீடியோ என்பது தற்போது இணையதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+