ஏழை பிராமண அர்ச்சகரை மணந்து கொண்டால் ரூ. 3 லட்சம்.. கர்நாடக அரசின் அதிரடி திட்டம்
கர்நாடக பிராமண பெண்ணுக்கு நிதியுதவி வழங்கும் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது
பெங்களூரு: ஏற்கனவே பாஜக அரசு பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களைவிட பிராமண சமூகத்துக்கு மட்டும் முன்னுரிமை அளிப்பதாக குற்றச்சாட்டு எழுந்து வரும் நிலையில், கர்நாடக மாநிலத்திலும் கர்நாடகாவில் எடியூரப்பா தலைமையிலான பாஜக அரசு மீது அப்படி ஒரு புகார் கிளம்பி உள்ளது.
பொருளாதார ரீதியாக பின் தங்கியவர்களுக்கு இட ஒதுக்கீடு என்று சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.. அந்த வகையில், கர்நாடக மாநில பிராமணர்கள் வளர்ச்சிக் கழகத்தை கடந்த ஆண்டு உருவாக்கியது...அந்த பிராமணர்கள் கழகம் புதிதாக இரண்டு திட்டங்களைக் கொண்டுவந்துள்ளது... அதன்படி 8 லட்சம் ரூபாய் மற்றும் 5 ஏக்கர் நிலமும் பின் தங்கியவர்களுக்கான அளவுகோலாக நிர்ணயிக்கப்பட்டது.

இந்த அறிவிப்புப்படி கர்நாடக பிராமண சமூகத்துக்கு, இந்த 2 திட்டங்களையும் அம்மாநில அரசு அறிமுகப்படுத்தி உள்ளது.. அருந்ததி, மைத்ரே என்று இந்த திட்டங்களுக்கு பெயரும் வைத்தது.
கர்நாடக மாநில பிராமண மேம்பாட்டு வாரியத்தின் கீழ், அருந்ததி திட்டத்தின் கீழ், திருமணமாகும் பிராமண பெண்ணின் குடும்பத்திற்கு, கல்யாணத்திற்காக ரூ.25,000 வழங்கப்படும். அதேபோல் மைத்ரேய் திட்டத்தில், பிராமண சமூகத்திற்குள் பிராமண சமூக மணமகள் கல்யாணம் செய்து கொண்டால் அல்லது அர்ச்சகரை கல்யாணம் செய்து கொண்டால் ரூ.3 லட்சம் வழங்கப்படும்.
இந்த பணம் 3 தவணைகளாக அவர்களுக்கு வழங்கப்படும். 4வது, வட்டியும் அந்த பெண் முழு பணத்தையும் பெற்றுக்கொள்ளலாம். இதனால், அருந்ததி திட்டத்தின் கீழ், 550 பிராமண குடும்பங்களும், மைத்ரேய் திட்டத்தின் மூலமும் 25 பிராமண குடும்பங்களும் பயனடைவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த திட்டங்களின் கீழ் பயன் பெறுபவர்களுக்கு 5 ஏக்கருக்கு மேல் விவசாய நிலம் இருக்கக் கூடாது.
1,000 சதுர அடிக்கு அதிகமான வீடு இருக்கக் கூடாது. அவர்கள், பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியலின சமூகமாக இருக்கக் கூடாது. ஆண்டு வருமானம் 8 லட்ச ரூபாய்க்கு அதிகமாக இருக்கக் கூடாது என்றும் வரையறைக்கப்பட்டுள்ளது.
-
100 எம்எல்ஏக்கள் ஆதரவு இருந்தும் முதல்வர் பதவியை விட்டு கொடுத்த சித்தராமையா.. ஏன் தெரியுமா? பின்னணி! -
கர்நாடக அரசியலில் அதிரடி.. 1 முதல்வர், 4 துணை முதலமைச்சர்கள்.. டிகே.சிவக்குமார் மாஸ்டர் பிளான்! -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
கர்நாடகா முதல்வராகிறார் டிகே சிவக்குமார்.. ஜூன் 3ம் தேதி பதவியேற்பு.. சித்தராமையா மகனுக்கு ‘ஜாக்பாட்' -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications