விநாயகர் சதுர்த்தி ஊர்வலம்.. "டான்ஸ்" ஆடியவர்களை கட்டி வைத்து அடித்து சித்ரவதை.. கர்நாடகாவில் கொடுமை
பெங்களூரு: விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போது நடனமாடிய இளைஞர்களை சிலர் கட்டி வைத்து அடித்து சித்ரவதை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விநாயகர் சதூர்த்தி இந்தியாவில் மிக விமரிசையாக கொண்டாடப்படும் பண்டிகை ஆகும். எந்த அளவுக்கு இந்த பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்படுகிறதோ, அதே அளவுக்கு வன்முறைச் சம்பவங்களும் நடைபெறுவது வழக்கம். இந்த மாநிலம் அந்த மாநிலம் என எந்த வேறுபாடும் இன்றி நாட்டின் அனைத்து பகுதிகளிலும் வன்முறைச் சம்பவங்கள் நிகழும். விநாயகர் சதூர்த்தி தினத்தன்று பாடல்களை போடுவதில் ஏற்படும் தகராறு தொடங்கி, விநாயகர் சிலைகளை கரைக்கும் வரை அடிதடி சம்பவங்களும், தகராறுகளும் ஏற்படும். சில சமயங்களில் இந்த வன்முறைகள் கொலை வரை சென்றுவிடும். மத ரீதியான மோதல்கள் கூட பல பகுதிகளில் நடைபெற்றது உண்டு.

இந்நிலையில், கர்நாடகா மாநிலம் பெங்களூரு அருகே உள்ள மஞ்ச்ஹல்லி கிராமத்தில் விநாயகர் சிலைகளை கரைக்க செல்வதற்கான ஊர்வலம் நேற்று நடைபெற்றது. அப்போது அங்குள்ள ஒரு வீட்டின் முன்னால் நின்று கொண்டு சில இளைஞர்களாக உற்சாகமிகுதியில் நடனமாடிக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வீட்டில் இருந்தவர்கள், சற்று தள்ளி சென்று ஆடுமாறு கூறியதாக தெரிகிறது. ஆனால் அந்த இளைஞர்கள் அதனை சட்டை செய்யாமல் தொடர்ந்து நடனமாடிக் கொண்டிருந்தனர்.
அப்போது வீட்டுக்குள் இருந்த வெளியே வந்த சிலர், அங்கிருந்த மூன்று இளைஞர்களை மடக்கி பிடித்து குண்டுக்கட்டாக வீட்டுக்கு கொண்டு வந்தனர். பின்னர் அவர்களின் கை, கால்களை கயிற்றால் கட்டி அவர்களை பெல்ட் மற்றும் கட்டையால் சரமாரியாக தாக்கினர். இதில் அவர்களுக்கு முகம் மற்றும் தலையில் இருந்து ரத்தம் கொட்டியது.
இதையடுத்து, அந்த இளைஞர்களின் நண்பர்கள் அவர்களை விட்டுவிடுமாறு கெஞ்சிநர். ஆனால், இன்று முழுவதும் அவர்களை வெளியே விட போவதில்லை என வீட்டின் உரிமையாளர்கள் கூறினர். இதகுறித்த புகாரின் பேரில் போலீஸார் அங்கு, கட்டிப் போடப்பட்டிருந்த இளைஞர்களை விடுவித்தனர். மேலும், அவர்களை கயிற்றால் கட்டி தாக்கிய நாகே கவுடா உள்ளிட்ட 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.
-
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்?












Click it and Unblock the Notifications