"வீக் என்ட் லாக்டவுன்.." இரவு நேரத்திலும் ஊரடங்கு.. கட்டுப்பாடுகளை கிடுகிடுவென அதிகரித்த கர்நாடகா

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கேரளா மற்றும் மகாராஷ்டிராவின் எல்லை மாவட்டங்களில் வார இறுதி ஊரடங்கு மற்றும் இரவு நேர ஊரடங்கு உத்தரவை அமல்படுத்த கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது.

வார இறுதி ஊரடங்கு என்பது, வெள்ளிக்கிழமை இரவு 9 மணி முதல் திங்கள் காலை 5 மணி வரை, 8 எல்லை மாவட்டங்களில் அமலுக்கு வருகிறது.

பீதர், கல்புர்கி, பெலகாவி, விஜயபுரா ஆகிய வட கர்நாடக எல்லைப்புற மாவட்டங்களிலும், சாம்ராஜ்நகர், மைசூரு, குடகு மற்றும் தட்சின கன்னடம் ஆகிய தெற்கு மாவட்டங்களிலும் இந்த புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படும்.

பசவராஜ் பொம்மை அறிவிப்பு

பசவராஜ் பொம்மை அறிவிப்பு

கொரோனா தொடர்பான ஆலோசனைக் குழு மற்றும் பிற மூத்த அதிகாரிகளுடன் இன்று நடத்திய ஆலோசனைக்குப் பிறகு இந்த அறிவிப்பை முதல்வர் பசவராஜ் பொம்மை வெளியிட்டார். நாட்டிலேயே, மகாராஷ்டிரா மற்றும் கேரளாவில்தான் கொரோனா பாதிப்புகள் மோசமாக இருப்பதால், இந்த கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டுள்ளன. அதேநேரம், பெங்களூர் நகரம் மற்றும் பெங்களூர் கிராமப்புற மாவட்டங்களில் வார இறுதி நாட்களில் ஊரடங்கு அமல்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இரவு நேர ஊரடங்கு வழக்கம்போல தொடரும்.

பள்ளிகள் திறப்பு

பள்ளிகள் திறப்பு


ஆகஸ்ட் 23 முதல் மாற்று நாட்களில் (ஆல்டர்னேட்டிவ் டேஸ்) பள்ளிகள் மற்றும் பியூசி கல்லூரிகளை (9 முதல் 12 வரை) மீண்டும் திறக்கப்படும் என்று முதல்வர் அறிவித்தார். நிலைமையை ஆய்வு செய்த பின்னர் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பள்ளிகளை திறப்பது குறித்து முடிவு எடுக்கப்பட உள்ளது.

கர்நாடக நிலவரம்

கர்நாடக நிலவரம்

கர்நாடகா கடந்த வியாழக்கிழமை 1,785 புதிய கொரோனா வைரஸ் கேஸ்கள் மற்றும் 25 இறப்புகளைப் பதிவு செய்துள்ளது, மொத்த தொற்றுநோய்களின் எண்ணிக்கை 29.13 லட்சமாகவும், இதுவரை பலியானோர் எண்ணிக்கை 36,705 ஆகவும் உள்ளது. 1,651 டிஸ்சார்ஜ்கள் செய்யப்பட்டுள்ளன. இதுவரை கர்நாடக மாநிலத்தில் மொத்த ரெக்கவரி எண்ணிக்கை 28,52,368 ஆக உள்ளது.

புதிய கேஸ் எண்ணிக்கை

புதிய கேஸ் எண்ணிக்கை

வியாழக்கிழமை பதிவான 1,785 புதிய கேஸ்களில், 414 பெங்களூர் நகரத்தைச் சேர்ந்தவை. 5 இறப்புகள் அன்றைய தினம் பதிவாகின. மாநிலத்தில் மொத்தம் உள்ள ஆக்டிவ் கேஸ்கள் எண்ணிக்கை 24,414 ஆகும்.

நோய் பரவல்

நோய் பரவல்

ஒரு நாள் நேர்மறை விகிதம் 1.10 சதவிகிதம், இறப்பு விகிதம் (சிஎஃப்ஆர்) 1.40 சதவிகிதம். வியாழக்கிழமை பதிவான 25 இறப்புகளில் 5 பெங்களூர் நகர், பெலகாவி, தட்சிண கன்னடம் மற்றும் கோலார் 3, மண்டியா, மைசூர் மற்றும் உடுப்பி 2 ஆகும்.

Recommended Video

    மீண்டும் அதிகரிக்கும் Corona பாதிப்பு.. பதறும் China| Explained
    எந்த மாவட்டங்கள்

    எந்த மாவட்டங்கள்

    புதிய கேஸ்கள் பதிவாகியுள்ள மாவட்டங்களில், பெங்களூர் நகரத்தில் 414, தட்சிண கன்னடா 337, உடுப்பி 134, ஹாசன் 125, மைசூரு 105, குடகு 100 உள்ளன. இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கையில், பெங்களூர் நகர மாவட்டம் முதலிடத்தில் உள்ளது, மொத்தம் 12,29,340 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மைசூர் 1,73,599 மற்றும் தும்கூர் 1,18,136 கேஸ்கள் பதிவாகியிருந்தன. கர்நாடகாவில் கேஸ்கள் பெரிதாக அதிகரிக்கவில்லை. ஏற்கனவே இருந்த டிரெண்ட்தான் தொடர்கிறது. ஆயினும், முன்னெச்சரிக்கையாக இதுபோன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்று கூறப்படுகிறது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+