Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரோகினி ஐஏஎஸ்ஸின் அந்தரங்க போட்டோக்களை வெளியிட்ட ஐபிஎஸ்.. சர்ச்சையில் சிக்கிய சசிகலா புகழ் " டி ரூபா"

ரூபாவிற்கு மன நல பாதிப்பு ஏற்பட்டுவிட்டதாக ரோகினி பதிலடி கொடுத்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கர்நாடகாவில் இரண்டு பெண் குடிமை பணியாளர்களுக்கு இடையில் சமூக வலைத்தளங்களில் ஏற்பட்டுள்ள மோதல் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இரண்டு பேரும் மாறி மாறி போஸ்டுகளை போட்டுக்கொள்வது கடும் விமர்சனங்களை சந்தித்துள்ளது.

கர்நாடகாவை சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி டி ரூபாவை பலருக்கும் நினைவு இருக்கும். பரப்பன அக்ரகார சிறையில் சசிகலாவிற்கு சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு உள்ளதாக புகார் வைத்தது டி ரூபாதான்.

தற்போது ரூபா கர்நாடக மாநில கைவினைப் பொருட்கள் மேம்பாட்டுக் கழகத்தின் நிர்வாக இயக்குராக பதவி வகித்து வருகிறார். இந்த ரூபா தற்போது ஐஏஎஸ் அதிகாரி ரோகினி சிந்தூரி மீது பல்வேறு பரபரப்பு புகார்களை வைத்து இருக்கிறார்.

 என்ன புகார்

என்ன புகார்

ஐஏஎஸ் அதிகாரி ரோகினி சிந்தூரி கர்நாடக அறநிலையத்துறை இயக்குனராக இருக்கிறார். இந்த நிலையில் ரோகினி ஊழல் செய்வதாகவும், பல்வேறு முறைகேடுகளில் ஈடுபடுவதாகவும் ரூபா புகார் வைத்துள்ளார். இதெல்லாம் போக சக ஆண் ஐஏஎஸ் அதிகாரிகளிடம் ரோகினி வரம்பு மீறி பேசுவதாகவும் ரூபா புகார் வைத்துள்ளார். இதில் ரோகினி சில அந்தரங்க புகைப்படங்களை சக ஆண் ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு அனுப்பி உள்ளதாக ரூபா தெரிவித்து உள்ளார்.

சில வருடம்

சில வருடம்

கடந்த சில வருடங்களுக்கு முன்பே ரோகினி பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக ரூபா புகார் கொடுத்தது குறிப்பிடத்தக்கது. தற்போது மீண்டும் இவர்களுக்கு இடையில் மோதல் ஏற்பட்டு உள்ளது. இந்த முறை ரோகினியின் சில வாட்ஸ் ஆப் புகைப்படங்களை, அந்தரங்க புகைப்படங்களை ரூபா பகிர்ந்து உள்ளார். அதை பகிர்ந்து, ரோகினி இந்த புகைப்படங்களை ஆண் ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு அனுப்பி வருகிறார். அவர்களை மயக்கும் விதமாக இப்படி அனுப்புகிறார். இது ஆட்சி பணிகள் சட்ட விதிகளுக்கு எதிரானது. அவர் இந்த விதிகளை மீறிவிட்டார் என்று ரூபா குற்றஞ்சாட்டி இருக்கிறார்.

வீடியோ

வீடியோ

அதோடு வீடியோ ஒன்றையும் பகிர்ந்து ஜேடிஎஸ் எம்எல்ஏ மகேஷ் உடன் உணவகம் ஒன்றில் ரோகினி இருக்கும் காட்சிகளை ரூபா பகிர்ந்து உள்ளார். இதுவும் விதி மீறல் என்று ரூபா கூறி உள்ளார். அதாவது ரூபா தனது அந்தரங்க புகைப்படங்களை சக ஐஏஎஸ் ஆண் அதிகாரிகளுக்கு ஷேர் செய்வது தவறு, எம்எல்ஏவுடன் இருப்பது தவறு என்று ரூபா கூறி உள்ளார். ரோகினி சக ஐஏஎஸ் ஆண் அதிகாரிகளுக்கு பகிர்ந்த புகைப்படங்களை ரூபா தனது போஸ்டில் பகிரங்கமாக வெளியிட்டு உள்ளார். இந்த நிலையில்தான் இவர்கள் இருவருக்கும் மோதல் ஏற்பட்டு உள்ளது.

ரோகினி

ரோகினி

இந்த புகைப்படங்கள் பொய்யானது. இதில் உண்மை இல்லை. இவை எல்லாமே மார்ப் செய்யப்பட்ட போட்டோக்கள். ரூபா வேண்டுமென்று என் மீது உள்ள பகையால் இப்படி செய்கிறார். ரூபாவிற்கு மன நல பாதிப்பு ஏற்பட்டுவிட்டதாக ரோகினி பதிலடி கொடுத்துள்ளார். ரோகினி தனது சக ஐஏஎஸ் ஆண் அதிகாரிகளுக்கு புகைப்படங்களை பகிர்ந்தது தவறுதான். அதை ரூபா இணையத்தில் வெளியிட்டதும் தவறுதான் என்று அந்த போஸ்டுகளுக்கு கீழ் இணையத்தில் நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். இரண்டு பேருமே ஆட்சி பணி விதிகளை மீறிவிட்டதாக கூறப்படுகிறது. இந்த அந்தரங்க போட்டோ விவகாரம் கர்நாடகாவை உலுக்கி உள்ள நிலையில் இதில் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அம்மாநில முதல்வர் பொம்மை தெரிவித்துள்ளார் .

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+