ரூ.10000 கோடி கணக்கில் வராத பணம் - கண்டுபிடித்த வருமான வரித்துறை
கடந்த நிதியாண்டில், 10,000 கோடி ரூபாய்க்கும் அதிகமான கணக்கில் வராத வருமானத் தொகையை வருமான வரித் துறை கண்டுபிடித்துள்ளது.
டெல்லி: கடந்த நிதியாண்டில், 10,000 கோடி ரூபாய்க்கும் அதிகமான கணக்கில் வராத வருமானத் தொகையை வருமான வரித் துறை கண்டுபிடித்துள்ளது. இது முந்தைய நிதியாண்டின் கண்டுபிடிக்கப்பட்ட மதிப்பை விட கிட்டத்தட்ட 20 சதவிகிதம் அதிகமாகும்.
கடந்த 2017-18ம் நிதியாண்டுக்கான வருமான வரித்தாக்கல் செய்யும் நடவடிக்கைகள் சூடுபிடித்துள்ளது. தனிநபர் மற்றும் நிறுவனங்கல் வருமான வரித்தாக்கல் செய்வதற்கான நடவடிக்ககைளை துரிதப்படுத்தி வருகின்றன. தனிநபர் பிரிவைச் சார்ந்தவர்கள் தற்போதே வருமான வரித்தாக்கல் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மிகப்பெரும் தொழில் நிறுவனங்கள் கடந்த ஏப்ரல் மாதத்திலேயே வருமான வரித்தாக்கலுக்கான நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளனர். சில நிறுவனங்கள் தற்போதே 2017-18ம் நிதியாண்டுக்கான வருமான வரி ரிட்டன்களை தாக்கல் செய்துவிட்டனர். இவ்வாறு தாக்கல் செய்துள்ள வருமான வரி ரிட்டன்களில் சில நிறுவனங்கள் தங்களின் வெளிநாட்டு வருமானத்தை கணக்கில் காட்டாமல் மறைத்துள்ளதாக தெரியவந்துள்ளது.
கடந்த 2017-18ம் நிதியாண்டுக்கான வருமான வரித்தாக்கல் செய்யும் நடவடிக்கைகள் சூடுபிடித்துள்ளது. தனிநபர் மற்றும் நிறுவனங்கள் வருமான வரித்தாக்கல் செய்வதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்தி வருகின்றன. தனிநபர் பிரிவைச் சார்ந்தவர்கள் தற்போதே வருமான வரித்தாக்கல் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
போதாக்குறைக்கு அனைத்து வங்கிகளும் தங்கள் வாடிக்கையாளர்களின் ஆதார் எண்ணையும் வங்கிக் கணக்குடன் இணைத்துவிட்டதால், வாடிக்கையாளர்களின் அனைத்து வங்கி நடவடிக்கைகளும் (வெளிநாட்டு வங்கிக் கணக்குகள் உட்பட) வருமான வரித்துறைக்கு கழுகுப்பார்வைக்கு சென்றுவிடுகின்றன. இதனை அறியாத சில நிறுவனங்களும் தனி நபர்களும் வழக்கம் போல தங்களின் வெளிநாட்டு வங்கிக் கணக்கு நடவடிக்கைகள் மற்றம் வருமானத்தையும் வருமான வரி ரிட்டனில் காட்டாமல் தப்பித்து விட்டதாக தப்புக் கணக்கு போட்டுவிட்டனர்.
வெளிநாட்டு வருமானம் மற்றும் கணக்குகளை முறையாக வருமான வரி ரிட்டனில் காட்டாமல் சுமார் 6000 நிறுவனங்கள் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. இதுகுறித்து வருமான வரித் துறையின் உயரதிகாரி ஒருவர் ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திடம் பேசுகையில், நடப்பு நிதியாண்டில் 10,767 கோடி ரூபாய் மதிப்பிலான கணக்கில் வராத வருமானத் தொகையை வருமான வரிக்கான பொது இயக்குநரகம் கண்டுபிடித்துள்ளதாகவும், இது முந்தைய நிதியாண்டின் மதிப்பான 9,051 கோடி ரூபாயை விட அதிகம் என்றும் தெரிவித்துள்ளார்.
பான் எண்ணைச் சாராத தகவல்கள், வெளிநாட்டுக் கணக்கு வரி இணக்கச் சட்டம், வாகனப் பரிமாற்றத் தகவல் மற்றும் பொது அறிக்கை தரநிலை போன்றவற்றைச் சரிபார்க்கையில் இத்தகையக் கணக்கில் வராத வருமானத் தொகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
வருமான வரித் துறையின் தகவலின்படி, நடப்பு நிதியாண்டில் வெளிநாட்டுக் கணக்கு வரி இணக்க வழக்குகள் கடந்த ஆண்டை விட மூன்று மடங்கு உயர்ந்துள்ளது. மேலும், வெளிநாட்டுக் கணக்கு வரி இணக்கச் சட்டத்தின் (Foreign Account Tax Compliance Act) கீழ் கணக்கில் வராத வருமானத் தொகை இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது. பணமதிப்பழிப்பு அறிவிப்புக்குப் பிறகு வாகனப் பரிமாற்றம் மற்றும் பொது அறிக்கை தரநிலை வழக்குகள் மூன்று மடங்கு அதிகரித்துள்ளது.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications